வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

விபசாரத்தில் பெண்களை ஈடுபடுத்தியதாக பாலிவுட் நடிகை அம்ரிதா கைது!

 

விபசாரத்தில் பெண்களை ஈடுபடுத்தியதாக பாலிவுட் நடிகை அம்ரிதா கைது!

விபசாரத்திற்கு பெண்களை ஈடுபடுத்தியதாக பாலிவுட் நடிகை அம்ரிதா கைது செய்யப்பட்டுள்ளது, திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மும்பையில் உள்ள கோரேகாவ்ன் பகுதியில் இருக்கும் 5 ஸ்டார் ஹோட்டலில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் போலியாக வாடிக்கையாளர்களை உள்ளே அனுப்பியதில் அங்கு விபசாரம் நடப்பது கண்டு பிடிக்கப்பட்டது.


இதையடுத்து ஹோட்டலுக்குள் நுழைந்த போலீஸ் துணை கமிஷனர் டி.எஸ்.சுவாமி தலைமையிலான போலீசார் அங்கு விபசாரத்தில் ஈடுபட்டு இருந்த 2 பெண்களை
மீட்டனர்.
.
அவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய பாலிவுட் நடிகை அம்ரிதா தனோவா(32) மற்றும் மாடல் அழகி ரிச்சா சிங் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அம்ரிதா மற்றும் ரிச்சா ஸ்டார் ஹோட்டல்களில் நடக்கும் விபசார தொழிலுக்கு பெண்களை சப்ளை செய்து வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்கள் மீது விபச்சாரம் உட்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

பாலிவுட் நடிகை விபச்சார வழக்கில் கைதாகி இருப்பது பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

399 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன