மக்களுக்கு அல்வா கொடுத்த மத்திய பட்ஜெட் – கமல்ஹாசன்
மத்தியில் ஆளும் பாஜக அரசின் 2020 மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்று தாக்கல் செய்தார்.
வழக்கமாக மத்திய அரசு எப்போதெல்லாம் பட்ஜெட் தாக்கல் செய்தாலும் அதற்கு முன் பட்ஜெட் தயாரித்த பணியாளர்கள் அனைவருக்கும் இனிப்பான அல்வா கிண்டி தருவது வழக்கம்.
இந்த பட்ஜெட்டின் போதும் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அல்வா கிண்டி ஊழியர்களுக்கு கொடுத்தார்.
மிக நீண்ட பட்ஜெட் உரை. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்த பட்ஜெட்டை “மிக நீண்ட பட்ஜெட் ஆனாலும் வெற்று பட்ஜெட்” என கிண்டல் அடித்தார்.
நடிகரும் தமிழக அரசியல்வாதியுமான கமல்ஹாசன் இந்த பட்ஜெட் பற்றி டிவிட்டரில் ” அதிகாரிகளுக்கு அல்வாவுடன் ஆரம்பிக்கப்பட்ட பட்ஜெட், மக்களுக்கு அல்வாவுடன் முடிவடைந்தது.
நீண்ட உரை, ஆனால் சரியான தீர்வுகள் இல்லை.” என குறிப்பிட்டுள்ளார்.
கமல்ஹாசனின் இந்த அல்வா கமெண்ட் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
அதிகாரிகளுக்கு அல்வாவுடன் ஆரம்பிக்கப்பட்ட பட்ஜெட், மக்களுக்கு அல்வாவுடன் முடிவடைந்தது.
நீண்ட உரை, ஆனால் சரியான தீர்வுகள் இல்லை.— Kamal Haasan (@ikamalhaasan) February 1, 2020