
கொரானா வைரஸ் பீதி… சீனாவில் கரன்சியை அழிக்க திட்டம்!
சீனாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் இது வரை 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 72,000 பேருக்கு மேல் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுதும் பெரும் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே கொரோனா வைரஸ், நுண் எச்சில் நீர் துகள்கள் படிந்த கரன்சி நோட்டுகள் மூலம் பரவ வாய்ப்புள்ளதால், ஹூபாய் மாகாணத்தின் ஷாப்பிங் மால்கள், பேருந்துகள், மருத்துவமனைகள் ஆகியவற்றில் வசூலான கரன்சி நோட்டுகளை எரித்து சாம்பல் ஆக்க சீன மத்திய வங்கி முடிவு செய்துள்ளது. அதன் படி வங்கிக்கு வரும் நோட்டுகளை 14 நாட்களில் அல்ட்ரா வைலட் கதிர்கள் மற்றும் அதிக வெப்பதில் வைத்து நோட்டுகளை அழிக்க சீன அரசு உத்தரவிட்டுள்ளதாம்.
ஏற்கனவே இந்த மாகாணம் முழுதும் உள்ள எல்லைக்குள் யாரும் வரவோ வெளியேறவோ முடியாதபடி அரசு தடை செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
