செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 30
Shadow

ஹூகானில் உள்ள இந்தியர்களை மீட்க மீண்டும் சீனா செல்லும் ராணுவ விமானம்!

 

 

சீனாவில் உள்ள ஹூகான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 136 பேர் உயிரிழந்தாகவும், ஆயிரத்து 749 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுதும் பெரும் பீதியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி வரும் இந்த கொரானா வைரஸ் பாதிப்பை தடுக்க பல நாடுகளில் மருந்து கண்டுபிடிக்க கடும் ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் சீனாவில் உள்ள ஹூகான் மாகாணத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ஏற்கெனவே மத்திய அரசு அனுப்பி வைத்த இரு விமானங்கள் மூலம் ஹூகானில் இருந்து 640 இந்தியர்கள் கடந்த 1 மற்றும் 2–ந் தேதிகளில் டெல்லிக்கு விமானம் மூலம் அழைத்து வரப்பட்டனர். அவர்களில் 406 பேர் டெல்லியில் உள்ள இந்தோ–திபெத்திய எல்லை போலீஸ் படை முகாமில் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டனர். மற்றவர்கள் அரியானா மாநிலத்தில் உள்ள ராணுவ மையத்தில் தங்கவைக்கப்பட்டனர்.


இதற்கிடையே, டெல்லி முகாமில் இருந்த 406 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று இறுதிக்கட்ட பரிசோதனையில் உறுதியானது. எனவே, 17–ந் தேதியில் இருந்து அவர்கள் படிப்படியாக வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.

இந்தநிலையில், சீனாவின் ஹூகான் நகரில் இருந்து மேலும் பல இந்தியர்களை அழைத்து வருவதற்காக மிகப்பெரிய விமானத்தை மத்திய அரசு நாளை அனுப்பி வைக்க உள்ளது.

சீனா செல்ல உள்ள இந்திய விமானப்படையின் சி-17 ரக விமானத்தில் மருந்துகளும் எடுத்துச் செல்லப்படவுள்ளதாக கூறப்படுகிறது. சிறப்பு இராணுவ மருத்துவ குழுவும் செல்கிறதாம்.

297 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன