செவ்வாய்க்கிழமை, மே 14
Shadow

திமுகவில் மீண்டும் மூத்தவர்களே ராஜ்யசபை எம்பி ஆகிறார்கள்… இளைஞர் அணிக்கு வாய்ப்பு இல்லை!

 

 

திமுகவில் மீண்டும் மூத்தவர்களே ராஜ்யசபை எம்பி ஆகிறார்கள்… இளைஞர் அணிக்கு வாய்ப்பு இல்லை!

தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தல் வரும் மார்ச் மாதம் 26ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதிமுக மற்றும் திமுக கடந்த சில நாட்களாக வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக இருந்தது.

அதிமுக கூட்டணியில் எப்படியும் ஒரு எம்பி பதவியை பெற தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் பல நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தபோதிலும், அதிமுக அதற்கு இணங்கவில்லை.

திமுக கூட்டணியில் இந்த பிரச்சனையே இல்லை. இருந்த போதும் சீனியர்களை ஒதுக்கிவிட்டு இளைஞர்கள் பலருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.


இந்த நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து உள்ளார்.

ஏற்கனவே மாநிலங்களவை எம்பி இருந்து வரும் திருச்சி சிவா மற்றும் என் ஆர் இளங்கோ ஆகியோர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி பதவி முடிய உள்ள  இருவருக்கும் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது

 

அதேபோல் மூன்றாவதாக அந்தியூர் செல்வராஜ் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார் இவர் அந்தியூர் தொகுதியில் கடந்த 1996ல் எம்எல்ஏ ஆக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது முன்னாள் அமைச்சரான அந்தியூர் செல்வராஜ் திமுகவின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது

மூத்தவர்களை ஒதுக்கி வைத்துவிட்டு இளைஞர்கள் பலருக்கு சீட் கிடைக்கும் என கூறப்பட்ட நிலையில் 3 பதவிகளும் சீனியர்களுக்கே அறிவிக்கப்பட்டு உள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

305 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன