உ.பி. பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு நீதி கேட்டு கனிமொழி தலைமையில், ஆளுநர் மாளிகை நோக்கி திமுக மகளிர் அணி பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியை தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசும்போது ‘‘ஹத்ராஸ் போன்ற பாலியல் கொடுமைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதே திமுகவின் கோரிக்கை. பெண்களுக்கு எதிரான குற்றத்தில் உத்தரபிரதேசம் முதலிடம், தமிழகம் இரண்டாமிடம். உ.பி. இன்று ரத்த பிரதேசமாக மாறிக் கொண்டிருக்கிறது.
தமிழகம் தேர்தலை எதிர்நோக்கி உள்ளது. தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறும். திமுக ஆட்சியை பிடித்த பிறகு, மாவட்டந்தோறும் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும்’’ என்றார்.
முன்னதாக திமுக எம்.பி. கனிமொழி கூறுகையில் ‘‘உ.பி.யில் பாலியல் வன்முறை அதிகரித்து வருகிறது. பசு மாடுகளை பாதுகாக்கும் ஆர்வத்தை பெண்கள் மீது காட்டுவதில்லை. பெண்களுக்கு இந்த நாட்டில் பாதுகாப்பின்மை...
DMK to take out rally against Hathras rape
Condemning the Centre over the handling of Hathras rape and murder case, the DMK announced a march by its women’s wing to Raj Bhavan today.
MK Stalin also sought an inquiry headed by a Supreme Court judge to ensure justice to the victim’s family. The rally, to be led by women’s wing secretary K Kanimozhi, was being organised to urge Governor Banwarilal Purohit to reflect the sentiments to Centre, Stalin said in a statement. Appealing to the women cadre to turn up in large numbers with torches to ignite hope among the people fighting for justice across the country, Stalin said, “Union Minister Amit Shah who holds Home portfolio should answer (for the incident).”
தடையை மீறி கிராமசபை கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்பு
*அரசின் தடையை மீறி திருவள்ளூர் மாவட்டத்தில் கிராமசபை கூட்டம்
*திருவள்ளூர் மாவட்டத்தில் கொரட்டூர் கிராமத்தில் கிராம சபை கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்பு
*100 பெண்கள் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்பு
நானும் விவசாயி, நானும் விவசாயிதான்’ என்று எடப்பாடி பழனிசாமி சொல்லிக் கொள்கிறாரே தவிர, விவசாயியாக நடந்துகொள்ளவில்லை.
கரூர் மாவட்ட தி.மு.க. சார்பில் காணொலி காட்சி மூலம் அக்கட்சியின் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
கொரோனா கால ஊரடங்கு தொடங்கியதில் இருந்தே, தினமும் காலையும், மாலையும் காணொலி மூலமாக தமிழ்நாடு முழுவதும் இருக்கும் தொண்டர்களை, நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடி கொண்டே இருக்கிறேன். எந்தச் சூழலிலும் நம்மால் கட்சிப் பணியாற்ற முடியும் என்பதற்கு உதாரணமாகவே இதனைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறேன்.
இதன் உச்சக்கட்டமாக 3,700-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்ட பொதுக்குழுவையே காணொலி மூலமாக நடத்தி கட்சியின் பொதுச் செயலாளரையும், பொருளாளரையும் அதில் தேர்வு செய்தோம். தற்போது 530-க்கும் மேற்பட்ட இடங்களிலி...
தமிழக சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வு இவ்வளவு பெரிய பிரச்சினையாக காரணம் தி.மு.க. அரசுதான் என்று குற்றம் சாட்டினார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது தான் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், அப்போது காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் தி.மு.க.வும் அங்கம் வகித்தது என முதலமைச்சர் பழனிசாமி ஆவேசத்துடன் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து முதலமைச்சரின் குற்றச்சாட்டிற்கு தி.மு.க. தரப்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இது குறித்து விளக்கம் அறித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீட் தேர்வை கொண்டு வந்தது பா.ஜ.க. அரசு, அதனை ஆதரித்தது அ.தி.மு.க. அரசு. மாணவர்கள் தற்கொலைக்கு அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும்தான் காரணமே தவிர, தி.மு.க. அல்ல.
2010-ல் நீட் தேர்வு வரவில்லை. இந்திய மருத்துவ...
சபாநாயகர் என்னுடைய கோரிக்கையை ஏற்கவில்லை: ஸ்டாலின் பரபரப்பு பேட்டி
சட்டசபை கூட்டத்தில் இருந்து வெளியில் வந்த திமுக தலைவர் மு க ஸ்டாலின் அளித்த பேட்டியின் விவரம் வருமாறு:
நீட் தேர்வால் தற்கொலை செய்த மாணவர்களுக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தினேன். அதை சபாநாயகர் ஏற்க மறுத்துவிட்டார்.
நீட்டால் உயிரிழந்த மாணவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற மறுத்தது கண்டிக்கத்தக்கது.
நீட் தேர்வை ரத்து செய்ய ஒரு முறை கூட முதல்வரோ, அமைச்சர்களோ டெல்லி சென்று வந்துள்ளனரா?
நீட் விவகாரத்தில் தமிழக அரசு நாடகம் ஆடுகிறது.
நீட், புதிய கல்விக்கொள்கை, கொரானா என பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டியுள்ளதால் சட்டப்பேரவையின் 2 நாட்கள் கூட்டம் போதாது என்று எதிர்க் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
https://youtu.be/WxoKMQHGji4...
திமுக.தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொரோனாவைவிடக் கொடூரமான முறையில் தமிழகக் காவல்துறை நடந்து கொண்ட காரணத்தால், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வணிகர்களான ஜெயராஜூம், அவரது மகன் பென்னிக்சும் அநியாயமாக அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஊரடங்கு நேரத்தில், மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய காவல்துறையினர், சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக்கொள்ள பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு அனுமதித்ததன் விளைவுதான் இந்தப் பெருங்கொடூரம்.
சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தந்தையையும் மகனையும் உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவல்துறையினர் சூழ்ந்துகொண்டு சரமாரியாகத் தாக்கியும், லத்தியை அவர்களின் பின்புறம் வழியே உடலுக்குள் திணித்துக் கொடுமைப்படுத்தியும், வேட்டி - சட்டையெல்லாம் ரத்தத்தில் நனையும் வகையில் சித்தரவதை செய்தும், நெஞ்சுப்பகுதியில...
முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி இன்று கூறியதாவது:
*இந்தியாவிலேயே நோயை வைத்து அரசியல் செய்யும் ஒரே தலைவர் திமுக தலைவர்தான்.*
*தான் இருப்பதாக அடையாளம் காட்டுவதற்காகவே ஸ்டாலின் தினந்தோறும் அறிக்கை விடுகிறார்.*
*இதுவரை எதிர்க்கட்சித் தலைவர் ஆக்கபூர்வமான ஆலோசனை எதையும் வழங்கவில்லை.*
*அரசு எதுவுமே செய்யவில்லை என்று, பொய்யான, தவறான குற்றச்சாட்டை மு.க.ஸ்டாலின் முன்வைக்கிறார்.*
*மு.க.ஸ்டாலின் சொன்னதை கேட்டு நிவாரணம் தந்த எம்எல்ஏ ஒருவர் கொரோனா பாதித்து உயிரிழந்துவிட்டார்.*
*தகுந்த ஆலோசனையின்றி மு.க.ஸ்டாலின் செயல்பட்டதால் ஒரு சட்டமன்ற உறுப்பினரை நாம் இழந்து விட்டோம்.*
*கடுமையாக பணியாற்றுவதால் தொற்று பரவுவது குறைக்கப்பட்டு, உயிரிழப்புகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.*
*ஊரடங்கு போடப்பட்டு 90 நாட்களாகி விட்டது, இந்த 90 நாட்களை வீணாக்கிவிட்டதாக ஸ்டாலின் கூறுகிறார்.*
*90 ந...