வியாழக்கிழமை, மே 16
Shadow

நீட் விவகாரத்தில் தமிழக அரசு நாடகம் ஆடுகிறது ஸ்டாலின் குற்றச்சாட்டு!

 

சபாநாயகர் என்னுடைய கோரிக்கையை ஏற்கவில்லை: ஸ்டாலின் பரபரப்பு பேட்டி

சட்டசபை கூட்டத்தில் இருந்து வெளியில் வந்த திமுக தலைவர் மு க ஸ்டாலின் அளித்த பேட்டியின் விவரம் வருமாறு:

நீட் தேர்வால் தற்கொலை செய்த மாணவர்களுக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தினேன். அதை சபாநாயகர் ஏற்க மறுத்துவிட்டார்.

நீட்டால் உயிரிழந்த மாணவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற மறுத்தது கண்டிக்கத்தக்கது.

நீட் தேர்வை ரத்து செய்ய ஒரு முறை கூட முதல்வரோ, அமைச்சர்களோ டெல்லி சென்று வந்துள்ளனரா?

நீட் விவகாரத்தில் தமிழக அரசு நாடகம் ஆடுகிறது.

நீட், புதிய கல்விக்கொள்கை, கொரானா என பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டியுள்ளதால் சட்டப்பேரவையின் 2 நாட்கள் கூட்டம் போதாது என்று எதிர்க் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

270 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன