திங்கட்கிழமை, ஏப்ரல் 29
Shadow

நீட்தேர்வு, சுற்றுச்சூழல் வரைவு, புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக திமுக எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்!

நீட்தேர்வு, சுற்றுச்சூழல் வரைவு, புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக திமுக எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்

 

கொரோனா அச்சுறுத்தல் மற்றும் பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு மத்தியில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்க உள்ளது. கொரோனா சூழல் காரணமாக, முதல்முறையாக, மக்களவையும், மாநிலங்களையும் இரு வெவ்வேறு ஷிப்ட்களில் நடக்கிறது. கூட்டம் நடத்துவதற்காக இருசபைகளும் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளன. கொரோனா கால கட்டுப்பாடுகளை பின்பற்றி  சமூக இடைவெளியுடன் இருக்கைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
கூட்டம் இன்று காலை 9 மணிக்கு தொடங்க உள்ள நிலையில், காலை 8 மணிக்கே எம்பிக்கள் பாராளுமன்றத்திற்கு வரத் தொடங்கினர்.
இந்நிலையில், முதல் நாளான இன்று பாராளுமன்றத்திற்கு வந்த திமுக எம்பிக்கள் அனைவரும், பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வு, புதிய கல்விக்கொள்கை, சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கை ஆகியவற்றை திரும்ப பெறக்கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக எம்பிக்கள் அனைவரும் நீட் தேர்வுக்கு எதிரான வாசகம் எழுதப்பட்ட மாஸ்க் அணிந்திருந்தனர்.
மக்களவை நடவடிக்கைகளை ஒத்திவைத்து நீட் தேர்வு தொடர்பாக விவாதிக்க வேண்டும் என திமுக சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது
217 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன