வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

வருமானவரித்துறை விழாவுக்கு வராவிட்டால் ஷூட்டிங் ஸ்பாட்டில் வந்து பிடிப்போம் – ரெய்டு மிரட்டலால் பயந்தாரா நயன்தாரா!?

 

 

வருமான வரி துறை நிகழ்ச்சிக்கு நயன்தாரா போனதற்கு “ரெய்டு” பயமா?!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அடையாளத்தோடு வலம் வருபவர் நயன்தாரா. ஆண்டுக்கு ஆண்டு வயசு கூடினாலும் தனது மார்க்கெட்டையும், சம்பளத்தையும் உயர்த்திக் கொண்டே போகும் நயன்தாராவுக்கு பொது நிகழ்ச்சிகள் என்றால் மட்டும் அலர்ஜி.

பலகோடி சம்பளம் கொடுத்து தன்னை வைத்து படம் தயாரிக்கும் பட விழாக்களுக்கு கூட வர மாட்டார் நயன்தாரா என்பது பல ஆண்டுகளாக அவர் மீதான் குற்றச்சாட்டு.

ஆனாலும் ரசிகர்கள் விருப்பத்தால் வேறு வழியின்றி நயன்தாரா பின்னால் ஓட வேண்டிய நிலைக்கு தமிழ் சினிமா தள்ளப்பட்டுள்ளது.

பணம் மொத்தமாக வருகிறது சம்பளம் கேட்டது கிடைக்கிறது என்பதற்காக தனது நெற்றிக்கண் படத் தயாரிப்பையே நிறுத்தி விட்டு ஐசரி கணேஷ் தயாரிக்கும் மூக்குத்தி அம்மன் படத்தில் நடிக்க போனார் நயன்தாரா. இந்த படத்தில் நயனுக்கு இரட்டை இலக்க கோடிகளில் சம்பளம் வழங்கப்பட்டத்தாக கூறப்பட்டது.

இந்த படத்துக்காக விரதம் இருந்து கோயில் கோயிலாக போய் சாமி கும்பிட்டார் நயன்தாரா.

ஷூட்டிங் ஸ்பாட் வரை மட்டுமே இந்த பக்தி, மரியாதை எல்லாம். அந்த படம் ஷூட்டிங் முடிந்து போனால் பட விழாக்களுக்கு அழைத்தாலும் நயன்தாரா வராமல் ஏதாவது ஒரு காரணம் சொல்லி எஸ்கேப் ஆகிவிடுவார்.

இப்படி பட விழாக்களை தவிர்த்து டிமிக்கி கொடுக்கும் நயன்தாரா திடீரென வருமான வரி துறை நடத்திய மகளிர் தினவிழாவில் கலந்து கொண்டது திரையுலகில் பெரும் அதிர்ச்சியையும், கோவத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

அதே நேரம் இது போன்ற பொது விழாக்களுக்கு வருவதற்கு கோடிகளில் பணம் வாங்கும் நயன்தாரா இந்த வருமான வரி துறை விழாவுக்கு பைசா எதுவும் கேட்காமல் ப்ரீ சர்வீஸ் செய்திருப்பது ரசிகர்களிடையே பெரும் சந்தேகத்தை எழுப்பி உள்ளது. ஒன்று நயன்தாரா தனது வரவு செலவு கணக்குகளில் சிக்கி இருக்க வேண்டும் அல்லது விழாவுக்கு வர மறுத்தால் ரெய்டுக்கு வருவோம் என அன்பாக மிரட்டப்பட்டிருக்க வேண்டும் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

நயன்தாராவின் நிகழ்வுகளை பார்க்கும் போது ஏதோ ரெய்டு மிரட்டலுக்கு பயந்தே வருமானவரி துறை விழாவுக்கு போயிருப்பார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமான நண்பர்கள்.

இதற்கு காரணம் ஷூட்டிங் ஸ்பாட்டில் வந்து விஜய்யை வருமான வரித்துறை அதிகாரிகள் வலுக்கட்டாயமாக தங்கள் வாகனத்தில் ஏற்றிச் சென்று 2 நாட்கள் வெளியுலக தொடர்பை துண்டித்து டார்ச்சர் கொடுத்தது நயன்தாராவுக்கு தெரியாமலா போயிருக்கும் என்ற கருத்தும் உலா வருகிறது.

இதற்கு விடை இனி வரும் நாட்களில் தனது பட விழாக்களிலாவது நயன்தாரா கலந்து கொண்டால் பதில் கிடைக்கும்.

923 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன