வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

கொரானாவால் தடைபட்ட ஒலிம்பிக் போட்டிகள் 2021 ஜூலை 23ல் தொடங்கும்!

 

 

கொரானா வைரஸ் பீதியால் தள்ளிப்போன ஒலிம்பிக் போட்டிகள் வரும் 2021 ஜூலை 23ம் தேதி தொடங்கும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது.

உலகை அச்சுறுத்தி பல்லாயிரக்கணக்கான மக்களை பலிவாங்கி வரும் கொரானா வைரஸ் பரவலால் உலகின் பல நாடுகளில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் சீர்குலைந்து உள்ளது.

2020ல் டோக்கியோவில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள் கொரானா தொற்று பீதி காரணமாக தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த சூழலில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் அவசர கூட்டத்தில் 2020 ஒலிம்பிக் போட்டிகளை டோக்கியோவில் வரும் ஆண்டு ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டது.

உலகை அச்சத்தில் ஆழ்த்தி உள்ள கொரானா பீதி அதற்குள் கட்டுக்குள் வந்துவிடும் என ஒலிம்பிக் கமிட்டி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

331 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன