கொரானா தடுப்பு நிவாரண நிதிக்கு 3 கோடி கொடுத்த லாரன்ஸ்!
நாடு முழுதும் கொடிய கொரானா வைரஸ் காரணமாக அனைத்து துறைகளும் முடங்கி உள்ள நிலையில் கொரோனா நிவாரண நிதிக்கு பலரும் நிதி கொடுத்து வருகிறார்கள்.
நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் ரூ.3 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.
பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும் வழங்கியுள்ளார்.
மேலும் பெப்சி தொழிலாளர்களுக்கு ரூ.50 லட்சமும், நடனக்கலைஞர் சங்கத்திற்கு ரூ.50 லட்சமும்
மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25 லட்சமும், ஏழை எளிய மக்களுக்கு ரூ.75 லட்சமும் என மொத்தம் 3 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளார். தமிழ் நடிகர்களில் லாரன்ஸ் மட்டுமே அதிக நிதி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
385 Views