செவ்வாய்க்கிழமை, மே 21
Shadow

அறிமுக நடிகர் பெப்சிக்கு அள்ளிக் கொடுத்த நிதி 25 லட்சம்!

 

 

அறிமுக நடிகர் பெப்சிக்கு அள்ளிக் கொடுத்த நிதி 25 லட்சம்!

கொரானா வைரஸ் தாக்கதால் திரைத்துறை முடங்கி இருப்பதை கவனத்தில் கொண்டு அதில் அங்கம் வகிக்கும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரத்திற்காக அதன் தலைவர் செல்வமணி நன்கொடை வசூல் செய்து வருகிறார்.

உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த் தொடங்கி அஜீத், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், லாரன்ஸ்,  நயன்தாரா என பலரும் பல லட்சங்களை பெப்சிக்கு நிதியாக வழங்கி இருக்கிறார்கள். அதோடு அரிசி, சர்க்கரை, குளியல் சோப்புக்கள், துணி சோப்புக்கள், பருப்பு மூட்டைகள் எண்ணை பாக்கெட்டுகள் என பல்வேறு அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி இருக்கிறார்கள்.

திரைத்துறைக்கு புதிய அறிமுகம்… இன்னும் அவர் நடித்து ஒரு படம் கூட வெளியே வரவில்லை. அப்படி இருந்தும் திரைத்துறை தொழிலாளர் நலனுக்காக 25 லட்சம் ரூபாயை நன்கொடையாக பெப்சிக்கு வழங்கி இருக்கிறார் இந்த அறிமுக நடிகர்.

அதோடு அப்படி நன்கொடை கொடுத்த விவரத்தை கூட வெளியில் சொல்ல வேண்டாம் என கேட்டுக் கொண்டாராம்.

இன்றைக்கு பலகோடி சம்பளம் வாங்கும் பிரபலங்கள் பலர் சில மூட்டைகள் அரிசி கொடுத்தாலே அதை ஒரு செய்தியாக எல்லாருக்கும் அனுப்பி தான் உதவி செய்ததை போஸ்டர் அடித்து கொள்ளும் போது, கால் கோடி ரூபாயை தான் கொடுத்ததே வெளியில் தெரிய வேண்டாம் என சொல்லி இருக்கும் அந்த பிரபலம் வேறு யாருமல்ல குட்டீஸ் முதல் பெருசுகள் வரை டிவியில் பார்த்து ரசித்த லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் தான்.

இவரைப் போலவே பாராட்டுக்கு உரிய இன்னொரு நபர் நடிகர் லாரன்ஸ். அவர் மீதான பல விமர்சனங்கள் இருந்தாலும் திரைத்துறையில் சம்பாதித்த பணத்தில் திரைத்துறை தொழிலாளர்கள் மட்டுமில்லாமல் தன்னை அடையாளம் காட்டிய டான்சர் யூனியன், மாற்றுத்திறனாளிகள், ஏழை எளிய மக்கள் என அனைவருக்கும் 3 கோடி ரூபாயை நிதியாக வழங்கி இருக்கிறார்.

தமிழ் திரையுலகில் இவரை விட அதிகம் கோடிகள் சம்பளம் வாங்கும் பலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதில் சிலர் ஏதோ ஒரு தொகை கொடுத்திருக்கிறார்கள். பலர் இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார்கள்.

860 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன