செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 28
Shadow

தமிழகம் உட்பட 5 மாநிலங்கள், பிரதமர் நிவாரண நிதிக்கும் சேர்த்து ரூ.1.30 கோடி வழங்கிய விஜய்!

 

கொரானா தடுப்பு நிவாரணத்திற்காக தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கும், பிரதமர் நிவாரண நிதியாகவும் ரூ.1.30 கோடி வழங்கிய விஜய்!

உலகம் முழுவதும் கொடூர தாண்டவம் ஆடி வரும் கொரானா வைரஸ் தமிழகத்திலும் பரவி மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கி உள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நிவாரண நிதி உதவிகள் மத்திய, மாநில அரசுகளால் கேட்கப்பட்டுள்ளது.

இது தவிர சினிமா தொழிலாளர்களுக்கு உதவ பெப்சியும் நிதி கேட்டு வருகிறது.

பல்வேறு திரைப்பிரபலங்கள் நிதி அளித்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் விஜய் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளார்.

பிரதமர் நிவாரண நிதியாக 25 லட்சம், தமிழக முதல்வர் நிவாரண நிதியாக 50 லட்சம், பெப்சி தொழிலாளர்களுக்கு 25 லட்சம் , கேரளாவுக்கு 10 லட்சம் மற்றும் கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு தலா 5 லட்சம் என மொத்தமாக ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கினார்.

இது தவிர தனது விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக உதவிகள் செய்ய ரசிகர் மன்றங்களுக்கும் நிதி அளித்துள்ளார்.

1,184 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன