
மீண்டும் ஊரடங்கு நீடிப்பு! முதல்வர்களுடன் பிரதமர் நாளை ஆலோசனை!!
கொரானா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மாதம் 24ம் தேதியில் இருந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.
இந்த ஊரடங்கு வரும் மே 3ம் தேதி முடிவுக்கு வர இருக்கிறது. ஆனால் கொரானா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த படியே செல்வதால் ஊரடங்கை முடிவுக்கு கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதே நேரம் கொரானா பாதிப்பை முற்றிலும் கட்டுப்படுத்த பல மாநில அரசுகள் ஊரடங்கை நீடிக்க முடிவு செய்து உள்ளது.
பிரதமர் மோடி மீண்டும் அனைத்து மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக நாளை ஆலோசனை நடத்த இருக்கிறார்.
இந்த ஆலோசனைக்கு பின் ஊரடங்கு மே 17ம் தேதி வரை நீடிக்கும் முடிவை அறிவிப்பார் என தெரிகிறது.
1,086 Views
