புதன்கிழமை, ஏப்ரல் 24
Shadow

ஜோதிகா கருத்தில் தவறில்லை – சூர்யா அதிரடி

 

 

ஜோதிகா பேசிய கருத்தில் எந்த மாற்றமும் இல்லை… அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பல மாதங்களுக்கு முன்பு ஜோதிகா ஒரு விருது விழாவில் பேசிய ஒரு கருத்து கடந்த சில நாட்களாக சர்ச்சையாக்கப்பட்டு விவாத பொருளாக மாற்றப்பட்டது

இது குறித்து எந்த பதிலும் சொல்லாமல் இருந்த சூர்யா திடீரென ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் உள்ள கருத்து;

மதங்களை கடந்து மனிதமே முக்கியம் என்பதை எங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க விரும்புகிறோம்.

அறிஞர்களும், ஆன்மீக பெரியவர்களும் ஏற்கனவே சொன்ன கருத்தைத்தான் ஜோதிகாவும் பேசியிருக்கிறார்.

எப்போதோ ஒரு விழாவில் பேசியது இப்போது விவாத பொருளாக மாற்றப்படுகிறது. ஊடகங்கள் இந்த சர்ச்சையை மிக சரியாக கையாண்டன.

கோயில்களைப் போலவே பள்ளிகளும், மருத்துவமனைகளும் உயர்வாக இருக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியதை சிலர் குற்றமாக பார்க்கிறார்கள்.

இதே கருத்தை விவேகானந்தர் போன்ற ஆன்மீக பெரியவர்களே சொல்லி இருக்கிறார்கள். மக்களுக்கு உதவினால் அது கடவுளுக்கு செலுத்தும் காணிக்கை என்பது திருமூலர் காலத்து சிந்தனை.
நல்லோர் சிந்தனையை படிக்காத காது கொடுத்து கேட்காதவர்களுக்கு இது தெரிய வாய்ப்பு இல்லை.

இந்த சூழலிலும் எங்களுக்கு ஆதரவு தரும் ரசிகர்கள், நல்லோர் பலரும் முகம் தெரியாதவர்கள் கூட எங்களுக்காக பதில் அளிக்கிறார்கள்.

நல்ல எண்ணங்களை விதைத்து நல்ல செயல்களை அறுவடை செய்ய முடியும் என்ற நம்பிக்கையை இவர்களே துளிர்க்க செய்கிறார்கள்.

அறிஞர்கள், ஆன்மீக பெரியவர்களின் கருத்தை பின்பற்றி சொல்லப்பட்ட கருத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று சூர்யா கூறியிருக்கிறார்.

723 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன