செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 28
Shadow

ஊரடங்கில் தளர்வுகள் எவை? முதல்வர் பழனிச்சாமி அறிக்கை

 

 

*அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை*

*அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமானப் பணிகள் மற்றும் சாலைப் பணிகள் சென்னையில் அனுமதிக்கப்படும்*

*சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த சார்ந்த நிறுவனங்கள் 25 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்*

*சென்னையில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி*

*உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் மட்டும் வழங்கலாம்*

*கட்டுமானப் பொருட்கள் மற்றும் எலெக்ட்ரிக் கடைகள் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி*

*மொபைல், கம்ப்யூட்டர், வீட்டு உபயோகப் பொருள் விற்பனை மையங்கள் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி*

*பிளம்பர், எலக்ட்ரீஷியன், ஏசி மெக்கானிக், தச்சர் உள்ளிட்டோர் உரிய அதிகாரிகளிடம் அனுமதி பெற்று பணிபுரியலாம்*

*Containment zone கட்டுப்பாடுகளில் எவ்வித தளர்வும் இல்லை*

*தமிழகத்தில் கட்டுமானப்பொருட்கள் எடுத்துச் செல்ல தடை கிடையாது*

*கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் எந்த தளர்வும் இல்லை.*

*தமிழகத்தில் கட்டுப்பாட்டு பகுதியில் ஊரடங்கு முழுமையாக அமல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.*

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி

*சென்னையில் 10 % பணியாளர்களுடன் ஐ.டி.நிறுவனங்கள் செயல்படலாம்*

*-தமிழக அரசு அறிவிப்பு*

526 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன