வியாழக்கிழமை, மே 16
Shadow

முட்டாள்தனமான செயல்- மோடி அரசை வசை பாடிய சு.சாமி!

 

முட்டாள்தனமான செயல்- மோடி அரசை வசை பாடிய சு.சாமி!

கொரானா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பல்வேறு மாநிலங்களில் சிக்கிக் கொண்ட தொழிலாளர்கள் மீண்டும் சொந்த ஊர்களுக்கு செல்ல
சிறப்பு ரயில்கள் விடப்பட்டது.

அதில் வெளி மாநில மக்கள் அவர்கள் ஊர்களுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஏதோ மத்திய அரசு இந்த சிறப்பு ரயில்களை இலவசமாக இயக்கியதாக பலரும் கூறிவந்தனர்

ஆனால், பயணம் செய்த அனைவரிட்மும் பலமடங்கு கூடுதலான கட்டணம் வசூலிக்கப்பட்டது. கட்டணம் செலுத்தாததால் பல ரயில்கள் கட்டணம் வரும் வரை காத்திருந்து தாமதமாக புறப்பட்டு சென்றது.

இந்த அதிகமான ரயில் கட்டண வசூலை கண்டித்து பாஜக’வின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கோபமாக கருத்து பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “அரை பட்டினி கொண்ட வெளி மாநில தொழிலாளர்களிடம் அதிக அளவில் ரயில் கட்டணத்தை வசூலித்த இந்த முட்டாள்தனமான செயலை எப்படி இந்த இந்திய அரசு செய்துள்ளது! வெளிநாட்டில் சிக்கி தவித்த இந்தியர்கள், ஏர் இந்தியா விமானம் மூலம் இலவசமாக அழைத்து வரப்பட்டனர். ரயில்வே துறை அனுமதிக்கவில்லை என்றால், PM Cares அந்த ஏழைகளின் ரயில் கட்டணத்தை கட்டியிருக்கலாமே?” என கடுப்பை காட்டி இருக்கிறார் சு.சாமி.

ஏற்கனவே இந்த ரயில் கட்டண விவகாரத்தில் மோடி அரசு மீது பலரும் அதிருப்தியை தெரிவித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

713 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன