அடுத்து தேர்தல் வந்தால் அதிமுகவுக்குத்தான் வாய்ப்பு? ரஜினி சூசகம்
ஊரடங்கு நேரத்தில் தமிழக அரசு மதுக்கடைகளை திறந்ததை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.
அதன் அடிப்படையில் மதுக்கடைகளை மூட கோர்ட் உத்தரவு பிறப்பித்தது.
இதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்து உள்ளது.
தமிழக அரசின் இந்த நடவடிக்கைகள் கடும் விமர்சனங்களுக்கு ஆளானது.
இந்த சூழலில் மதுக்கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து ரஜினிகாந்த் ட்விட்டர் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
அதில் “”இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும்””
*தயவுகூர்ந்து கஜானாவை நிரப்ப நல்ல வழிகள் பாருங்கள் என ரஜினிகாந்த் குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தாலும் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்பதை மிக நாசுக்காக வெளிப்படுத்தி இருக்கிறாரோ என்ற எண்ணத்தை இந்த பதிவு ஏற்படுத்தி உள்ளது.
டாஸ்மாக் கடைகளை திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் வாய்ப்பை மறந்து விட வேண்டும் என குறிப்பிட்டு, மீண்டும் தேர்தல் வந்தால் அதிமுக ஆட்சிக்கு வரும் வாய்ப்பு இருக்கிறது என்றும், மதுக்கடைகளை திறந்தால் அந்த வாய்ப்பு பறிபோகும் என்றும் ரஜினிகாந்த் அதிமுகவுக்கு ரகசிய வார்த்தைகள் மூலம் எச்சரிக்கை செய்து இருக்கிறார் என்றே நினைக்கத் தோன்றுகிறது.
அதே நேரம் அடுத்த தேர்தலிலும் அதிமுகவுக்கு ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடுவதால் தான் அரசியலுக்கு வரப்போவது இல்லை என்று சங்கேதமாக கூறியிருக்கிறாரோ…, அதோடு தனக்கு முதலமைச்சர் பதவி மீது ஆசை இல்லை என ஏற்கனவே அறிவித்து
மீண்டும் அதிமுகவுக்கு ரஜினிகாந்த் ஆதரவாக செயல்படலாம் என்றே தெரிகிறது.
பெரும்பாலும் நடிகர் கமல்ஹாசன் தான் தனது டிவிட்டர் பதிவுகளில் சூசகமாக பல விஷயங்களை சொல்வார். அதை படிக்கவே பல தமிழ் அகராதிகளை தேட வேண்டும். இப்போது ரஜினிகாந்த் அதே பாணியில் படிக்கிற தமிழில் பல அர்த்தங்கள் வைத்து பதிவு போட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
– கோடங்கி