
அந்தியூர் செல்வராஜூக்கு லக்… வி.பி துரைசாமிக்கு கல்தா!
திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து வி.பி. துரைசாமியை நீக்கி கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
வி.பி. துரைசாமிக்கு பதிலாக அந்தியூர் செல்வராஜை திமுக துணை பொதுச் செயலாளராக மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார்.
ஏற்கனவே அந்தியூர் செல்வராஜ் யாரும் எதிர்பாராத விதமாக திமுகவில் ராஜ்யசபை எம்.பி.ஆக்கப்பட்டார். இப்போது மீண்டும் அவருக்கு பதவி உயர்வு கொடுத்திருக்கிறார் ஸ்டாலின்.
பாஜக தமிழக தலைவர் எல்.முருகனை சமீபத்தில் வி.பி.துரைசாமி சந்தித்திருந்த நிலையில் திமுக நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக வி.பி. துரைசாமி கூறுகையில்,
பதவியை பறித்தது எதிர்பார்த்த ஒன்றுதான்; இதில் ஆச்சரியம் எதுவுமில்லை என்றும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது எனக்கு ஏற்கனவே தெரியும் என்றும் கூறினார்.
திமுகவில் எனக்கு எதிராக சிலர் சதி செய்துள்ளனர் எனவும் அருகில் இருப்பவர்களின் பேச்சை கேட்டு ஸ்டாலின் நடப்பதாகவும் வி.பி. துரைசாமி கூறியுள்ளார்.
