திங்கட்கிழமை, ஆகஸ்ட் 24
Shadow

2020 டோக்கியோ ஒலிம்பிக் கொரானாவால் ரத்து!?

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் கொரானாவால் ரத்து செய்யப்படும் என தெரிகிறது.

ஜப்பானில் உள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஜூலையில் தொடங்க இருந்தன. ஆனால் கொரானா வைரஸ் பாதிப்பு காரணமாக, ஓராண்டுக்கு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன. வைரஸ் பரவுவது கட்டுப்படுத்தப்படவில்லை எனில், 2021ஆம் ஆண்டிலும்கூட போட்டியை நடத்த முடியாது என ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஒலிம்பிக் போட்டிக்கான ஏற்பாட்டுக் குழுவில் தொடர்ந்து 3 ஆயிரம் பேர் அல்லது 5 ஆயிரம் பேரை பணியில் வைத்திருக்க முடியாது என்றும், மீண்டும் மீண்டும் ஒத்திவைத்து ஒலிம்பிக் போட்டியை நடத்த திட்டமிடும்போது, அதற்கேற்ப உலகம் முழுவதும் முக்கிய விளையாட்டுப் போட்டிகளை மாற்றியமைப்பது சாத்தியமற்றது என்று ஒலிம்பிக் கமிட்டி நிர்வாகி தாமஸ் பேக் கூறியுள்ளார்.

உலக அளவில் ஒலிம்பிக் விளையாட்டு என்பது ஒவ்வொரு வீரருக்கும் பெரிய கனவு. கொரானா வைரஸ் அந்த கனவை சிதைத்து போட்டுள்ளதால் ஒட்டுமொத்த விளையாட்டு வீரர்களும் சோகத்தில் உள்ளனர்.

518 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன