ஞாயிற்றுக்கிழமை, மே 3
Shadow

சாதிக்கொரு சட்டம் எதற்கு என கேள்வி கேட்டு உருவாகும் “ஓங்காரம்”

 

 

சாதிக்கொரு சட்டம் எதற்கு என கேள்வி கேட்டு உருவாகும் “ஓங்காரம்”

ஒன்றே குலம் என்றால் சாதிக்கொரு சட்டம் எதற்கு என்ற கேள்வியை எழுப்பி ஒரு படம் எடுக்கப்படுகிறது.

கொரானா ஊரடங்கு காரணமாக மதுரையில் எளிமையான முறையில் அலுவலக பூஜையுடன் ஓங்காரம் படம் தொடங்கி உள்ளது.

இளையராஜா இசையில் ‘அய்யன்’, ‘சேது பூமி’ ஆகிய படங்களை இயக்கிய, ஏ.ஆர்.கேந்திரன் முனியசாமி இந்தப் படத்தை இயக்குகிறார். வி.எம்.கே நிறுவனம் தயாரிக்கிறது.

இன்று அலுவலக பூஜை போடப்பட்ட நிலையில் கொரானா ஊரடங்கு முடிந்து மீண்டும் அனுமதி வழங்கப்படும் போது படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது.

524 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன