வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

கொரானா ஊரடங்கு 100ம் நாளில் தூய்மை பணியாளருக்கு விருது!

*கொரோனா ஊரடங்கு 100 வது நாள்*

தூய்மை பணியாளர் விருது

முதல் ஊரடங்கு மார்ச் 22 அன்று ஆரம்பித்தது. ஜீன் 29 இன்று கொரோனா ஊரடங்கின் 100 வது நாள்.

வழக்கமாக ஒரு திரைப்படம் 100 நாள் ஓடி வெற்றி கண்டால் அதற்கு விழா எடுத்து பணிபுரிந்தவர்களுக்கு சால்வை அணிவித்து விருது கொடுப்பார்கள்.

*திரு.வி.க.பூங்கா திரைப்பட கதாநாயகன் இயக்குனர் செந்தில்.செல்.அம்* அவர்கள் கொரோனா ஊரடங்கின் 100 வது நாளை முன்னிட்டு

கொரோனா ஊரடங்கின் அசாதாரணமான சூழ்நிலையில்கூட சாதாரணமாக பணிக்கு வந்து ஒருநாள் கூட இடைவெளி இல்லாமல் தனிமனித இடைவெளியுடன் பணிபுரிந்த அவரது கடலூர் வண்ணாரப்பாளையம் வார்டுக்குட்பட்ட தூய்மை பணியாளர்  E.லதா* அவர்களுக்கு சிறந்த தூய்மை பணியாளர் விருதினை வழங்கி சால்வை அணிவித்து கௌரவப்படுத்தினார்

மேலும் அவர் கூறுகையில் தூய்மை பணியாளர்களை மதிப்போம் அவர்களை நம் உறவினர்களாக பார்ப்போம்… அவர்களால் தான் நம் பாரதம் மணக்கிறது என்று கூறினார்

தூய்மை பணியாளர் லதா அவர்களிடம் இந்த விருது வாங்கியது பற்றி கேட்ட போது

ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு *வேர்வை* உடன் செல்வேன்

இன்று வீட்டிற்கு *சால்வை* உடன் செல்வேன்

மிக்க மகிழ்ச்சியான தருணம் என்று உணர்வுப்பூர்வமாக கூறினார்

 

 

225 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன