திங்கட்கிழமை, மே 4
Shadow

எம்.எல்.ஏ. செருப்பை தூக்கிச் சென்ற தலித் நிர்வாகி மீண்டும் சர்ச்சையில் சிக்கிய திமுக!

 

திமுக எம்.எல்.ஏ. செருப்பை தூக்கிச் சென்ற தலித் நிர்வாகி மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கட்சி!

திருப்பத்துார் மாவட்டம் ஆம்பூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. விஸ்வநாதன், பொன்னப்பள்ளி கிராமத்தில் தடுப்பணை பணிகளை பார்வையிட சென்றார்.

அந்த பகுதியில் பெய்த கடும் மழையால் எல்லா பக்கமும் சேறும் சகதியுமாக இருந்துள்ளது.

இதயடுத்து எம்.எல்.ஏ.விஸ்வநாதன் தான் காலில் போட்டிருந்த செருப்பை அங்கேயே கழற்றி வைத்து விட்டு வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு வெறும் காலில் நடந்து சென்றார்.

அப்போது அவரை பின் தொடர்ந்து சென்ற
திமுகவைச் சேர்ந்த வெங்கடசமுத்திரம் ஊராட்சி செயலாளர் சங்கர் கைகளில் எம்எல்ஏவின் செருப்பு இருந்தது. ஒரு கையில் செருப்பைத் தூக்கிக் கொண்டு அவர் நடந்து சென்ற புகைப்படங்கள் வெளியானதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.

ஏற்கனவே திமுகவில் உள்ள ஆர்.எஸ். பாரதி தலித் சமூகத்தினர் மீது தேவையற்ற கருத்தை கூறி சர்ச்சையில் சிக்கினார்.

இப்போது ஒரு எம்.எல்.ஏ. தனது செருப்பை தலித் நிர்வாகி ஒருவரை கைகளில் எடுத்து வரச்சொன்னது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆனால், இந்த விவகாரத்தில் எம்.எல்.ஏ.வை தொடர்பு படுத்தி என்னை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என செருப்பை கையில் தூக்கிச் சென்ற திமுக நிர்வாகி சங்கர் மறுப்பு தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அந்த எம்.எல்.ஏ. விளக்கம் அளித்ததாகவும் கூறப்படுகிறது.

324 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன