
திருமலையில் பரவும் கொரானா வைரஸ்… தனிமை முகாமாக மாறும் பக்தர்கள் தங்கும் அறை!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏற்கனவே அர்ச்சகர் உட்பட பணியாளர்கள் 11 பேருக்கு வைரஸ் கண்டறியப்பட்டது. இப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 30 காவலர்களுக்கு கொரானா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் உட்பட 44 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதால் அதிர்ச்சி அடைந்த தேவஸ்தானம் உடனடியாக அனைவருக்கும் பரிசோதனை நடத்த முடிவு எடுத்துள்ளது.
திருப்பதியில் உள்ள பக்தர்கள் ஓய்வு அறையை தனிமை முகாமாக மாற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
404 Views
