செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 16
Shadow

15 வயது சிறுமியை பல ஆண்டுகளாக சீரழித்த அதிமுக மாஜி எம்.எல்.ஏ. கைது!

 

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கைது!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள கோட்டார் பகுதியைச் சேர்ந்த 15 வயதான சிறுமி காணாமல் போனதாக காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளித்திருந்தார்.
இதையடுத்து புகாரை ஏற்று 15 வயது சிறுமியைத் தேடிவந்த போலிஸார் தன் காதலனுடன் இருந்த சிறுமியை மீட்டு அந்த வாலிபரைக் கைது செய்தனர். மேலும் சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.

போலிஸ் விசாரணையில் சிறுமியிடமிருந்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்தன.

சிறுமியின் வாக்குமூலத்தில் “என் தாய்க்கும் அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசனுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏவும் அவருடன் இருந்தவர்களும் என்னைத் தொடர்ந்து பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கிவந்தனர்” எனத் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன், சிறுமியின் தாய், காதலன் உட்பட நான்கு பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன் தலைமறைவானார். எனவே, போலிஸார் அவரை தேடிவந்த நிலையில் திசையன்விளையில் பதுங்கியிருந்த நாஞ்சில் முருகேசன் கைது செய்யப்பட்டார்.

209 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன