ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28
Shadow

Tag: பாலியல் தொல்லை

15 வயது சிறுமியை பல ஆண்டுகளாக சீரழித்த அதிமுக மாஜி எம்.எல்.ஏ. கைது!

15 வயது சிறுமியை பல ஆண்டுகளாக சீரழித்த அதிமுக மாஜி எம்.எல்.ஏ. கைது!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கைது! கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள கோட்டார் பகுதியைச் சேர்ந்த 15 வயதான சிறுமி காணாமல் போனதாக காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளித்திருந்தார். இதையடுத்து புகாரை ஏற்று 15 வயது சிறுமியைத் தேடிவந்த போலிஸார் தன் காதலனுடன் இருந்த சிறுமியை மீட்டு அந்த வாலிபரைக் கைது செய்தனர். மேலும் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். போலிஸ் விசாரணையில் சிறுமியிடமிருந்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்தன. சிறுமியின் வாக்குமூலத்தில் “என் தாய்க்கும் அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசனுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏவும் அவருடன் இருந்தவர்களும் என்னைத் தொடர்ந்து பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கிவந்தனர்” எனத் தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பாக அ.தி.மு.க முன்னாள் எம்.எல்....
வட்டிகட்டாத பெண்ணுக்கு பாலியல் தொல்லை… தட்டிக்கேட்டவர் கொலை… குற்றவாளிகளுக்கு 34 ஆண்டுகள் சிறை!

வட்டிகட்டாத பெண்ணுக்கு பாலியல் தொல்லை… தட்டிக்கேட்டவர் கொலை… குற்றவாளிகளுக்கு 34 ஆண்டுகள் சிறை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  வட்டி கட்டாத பெண்ணை பாலியல் கொடுமை செய்ததை தட்டிக் கேட்டவரை கொன்ற வழக்கில் குற்றவாளிகளுக்கு 34 ஆண்டுகள் சிறை! நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பகுதியில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இத்தகைய விசைத்தறி தொழிலில் ஈடுபட்ட தொழிலாளர் குடும்பங்களின் வறுமையை பயன்படுத்தி கந்துவட்டி கும்பல் தொழிலாளர்களின் ரத்தத்தை உறிஞ்சி வந்தது. பல குடும்பங்கள் இந்த கந்துவட்டி கும்பலின் கொடூரத்தால் சீரழிக்கப்பட்டன. இந்நிலையில், கடந்த 2010 ஆம் ஆண்டு கடன் பெற்ற ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண்ணைத் தல சிவா என்ற சிவக்குமார் தலைமையிலான கந்துவட்டி கும்பல் கடத்திச் சென்றது. அதன் பின்னர் பணத்தைக் கட்டமுடியாத கையறு நிலையில் கண்கலங்கி நின்ற அந்தப் பெண்ணை அப்படியே இழுத்துக் கொண்டு போய் ஓர் அறையில் அடைத்து கொடுமைப் படுத்தியிருக்கிறது. அதன்பின் தனது பைனான்ஸ் கம்பெனியில் வ...
பொள்ளாச்சி பாலியல் குற்றங்களில் உண்மையை கண்டறிய திலகவதி IPS தலைமையில் உருவான குழு!

பொள்ளாச்சி பாலியல் குற்றங்களில் உண்மையை கண்டறிய திலகவதி IPS தலைமையில் உருவான குழு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்களுக்காகக் களமிறங்கும் 28 பேர் கொண்ட நிபுணர்கள் குழு! பொள்ளாச்சியில் எழுந்த பாலியல் குற்றங்கள் தமிழகத்தையே அதிர வைத்துள்ளன. குற்றங்கள் தொடர்பான தகவல்கள் ஒவ்வொரு நாளும் கசிய கசியப் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைகளில் 200-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வந்தன. குற்றங்களின் தீவிரத்தைவிடவும் அதிர்ச்சியளிக்கக்கூடியதாக இருந்தது, அரசு அந்த வழக்குகளைக் கையாண்ட விதம். ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து காவல் துறையினரும் விசாரணையை மூடிமறைப்பதாக எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. பத்திரிகையாளர் சந்திப்பில் காவல் துறை கண்காணிப்பாளர், ஆளும் கட்சியினருக்கும் இதற்கும் சம்பந்தமில்லை எனத் தெரிவித்ததும், பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை வெளியிட்டதும் காவல்துறையின் அலட்சியத்தை வ...
மீடூ புகாரில் பிரபலமான சின்மயிக்கு செக் வைத்த ராதாரவி..!

மீடூ புகாரில் பிரபலமான சின்மயிக்கு செக் வைத்த ராதாரவி..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
தமிழ் திரைப்படங்களில் பின்னணி பாடல்களை பாடி வருபவர் பாடகி சின்மயி. இவர் பல படங்களுக்கு பின்னணி வசனங்களையும் பேசியுள்ளார். சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 படத்தில் நடிகை திரிஷாவுக்கு பின்னணி வசனம் பேசினார். இவர் மீடூ விவகாரத்தில் கடந்த அக்டோபரில், கவிஞர் வைரமுத்து தனக்கும், சில பெண்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக ட்விட்டரில் பதிவிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார். இந்த நிலையில், டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் தலைவரான நடிகர் ராதாரவிக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்த 2 பெண்களுக்கு பாடகி சின்மயி ஆதரவாக பேசினார். இதனால் தனது டப்பிங் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து தன்னை நீக்கி உள்ளனர் என தெரிவித்து உள்ளார். கடந்த 2 ஆண்டுகள...
பொய் சொன்ன  மீடூ ஸ்ருதி…  அர்ஜுன் ரசிகர்கள் கோபம்!

பொய் சொன்ன மீடூ ஸ்ருதி… அர்ஜுன் ரசிகர்கள் கோபம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
  நிபுணன் படத்தில் நடித்தபோது நடிகர் அர்ஜுன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் இரவு விருந்துக்கு அழைத்ததாகவும் நடிகை ஸ்ருதி ஹரிகரன் பரபரப்பு புகார் கூறினார். மீடூ இயக்கம் மூலம் அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்த இந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அர்ஜுன் ஸ்ருதி மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இருவரும் போலீஸ் நிலையத்தில் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார் அளித்துள்ளனர். ஸ்ருதி போலீஸ் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில் தான் திருமணமானவர் என்றும் கணவர் பெயர் ராம்குமார் என்றும் குறிப்பிட்டுள்ளார். இது கன்னட சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காரணம் ஸ்ருதி தான் திருமணமானவர் என்று இதுவரை வெளிப்படுத்தியதே இல்லை. ஸ்ருதிக்கு திருமணம் முடிந்துவிட்டதாக கடந்த ஆண்டே ஊடகங்களில் செய்தி வந்தது. ஆனால் ஸ்ருதி அதை மறுத்து வந்தார். போலீசில் புகார் செய்ததன் மூலம் ஸ்ருதி ரகசி...
நானா படேகரிடம் உண்மை கண்டறியும் சோதனை செய்ய வேண்டும் – தனுஸ்ரீ தத்தா

நானா படேகரிடம் உண்மை கண்டறியும் சோதனை செய்ய வேண்டும் – தனுஸ்ரீ தத்தா

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  பிரபல பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா. இவர் தமிழில் நடிகர் விஷாலுடன் ‘தீராத விளையாட்டு பிள்ளை’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் பாலிவுட்டின் மூத்த நடிகரான நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீதத்தா பாலியல் புகார் கூறியுள்ளார். 2008-ம் ஆண்டு ‘ஹார்ன் ஒகே பிளீஸ்’ என்ற இந்தி படத்தின் பாடல் காட்சி படமாக்கப்படும் போது அவர் பாலியல் தொல்லை கொடுத்தார் என்று குற்றம் சாட்டி இருந்தார். தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை நானா படேகர் மறுத்து வந்தார். தனு ஸ்ரீதத்தா பொய் கூறுவதாக தெரிவித்தார். இந்த நிலையில் நானா படேகர், நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா, தயாரிப்பாளர் சமீர்சித்திக், இயக்குனர் ராகேஷ் சாரங் ஆகிய 4 பேர் மீது தனுஸ்ரீ தத்தா மும்பை ஒஹிவாரா போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து நானா படேகர் உள்பட 4 பேர் மீது போலீசார் 354 மற்றும் 509 ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்...