செவ்வாய்க்கிழமை, மார்ச் 19
Shadow

பூசாரி உட்பட 17 பேருக்கு கொரானா… பதற்றத்தில் அயோத்தி ராமர் கோவில் வளாகம்!

 

அயோத்தி ராமர் கோயில் பூசாரி உட்பட பாதுகாப்பு போலீசார் 17 பேருக்கு கொரானா!

அயோத்தியில் வருகிற 5-ந்தேதி ராமர் கோவில் கட்டுமானத்துக்கான பூமி பூஜை நடக்கிறது. இதில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொள்கிறார். இதனால் அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. பிரதமர் வருகையையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அயோத்தி ராமர் கோவில் பூசாரி பிரதீப் தாஸ் என்பவருக்கு கொரானா தொற்று இருப்பது நேற்று உறுதியானது.

ராமர் கோவிலில் தினசரி பூஜைகளை செய்யும் முக்கிய 4 பூசாரிகளில் இவரும் ஒருவர். இதனையடுத்து பூசாரி தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.

மேலும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களையும் சுகாதாரத்துறையினர் தேடி வருகிறார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களுக்கு தாஸ் பேட்டி அளித்தார். இதனால் தங்களுக்கும் கொரானா தொற்று இருக்குமோ? என்ற அச்சத்தில் பத்திரிகையாளர்கள் உள்ளனர்.

இதுதவிர அயோத்தியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் 16 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. அவர்களுக்கும் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முக்கியமான பூசாரி உட்பட 17 போலீசாருக்கு கொரானா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதால் அயோத்தி நகரம் குறிப்பாக ராமர் கோயில் வளாகம் பெரும் பரபரப்பில் உள்ளது.

5ம் தேதி பிரதமர் மோடி அங்கு வருவதால் அதற்குள் அந்த பகுதியை தூய்மை படுத்த கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தொடர்கிறது.

அதோடு, கோயில் அடிக்கல் நாட்டுவிழா, பூமி பூஜைக்கு வேறு பூசாரிகளை அழைத்து வர திட்டமிடப்பட்டு உள்ளது.

225 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன