புதன்கிழமை, ஏப்ரல் 24
Shadow

எங்க அப்பா எப்பவும் “கிங்”தான் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பேச்சு!

 

தேமுதிக 16-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் தேமுதிக கொடியை விஜயகாந்த் ஏற்றினர். இதைத்தொடர்ந்து நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில், விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பேசி, “மொழியை மொழியாக பார்க்க வேண்டும். தமிழை பிரச்சாரம் செய்பவர்கள் அரசு வேலைகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

எனக்கு எப்பொழுதும் எங்க அப்பாதான் கிங். எனக்கு எங்க அப்பா கிங் ஆக இருக்க தான் ஆசை. செயற்குழு பொதுக்குழு கூட்டி தான் தேமுதிக கூட்டணியை முடிவு செய்யும். தேமுதிகவின் மேல் உள்ள நம்பிக்கையில் இளைஞர்கள் இந்த கட்சியில் சேர்ந்துள்ளனர்.

என்னை விஜயகாந்த் மகனாக பார்க்காதீர்கள். உங்கள் நண்பனாக பாருங்கள். 40 வருடங்கள் கேப்டன் மக்களுக்காக உழைத்து வருகிறார். இந்தி மொழி எதிர்ப்பு என பலர் தப்பான பிரச்சாரம் செய்கின்றனர். கேப்டன் வழியில் அன்னை மொழி காப்போம். அனைத்து மொழியும் கற்போம். பல மொழிகள் கற்றால் தான் நம் குடும்பத்தை காப்பாற்ற முடியும்

215 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன