வாக்குறுதி அளித்தபடி காலி இடங்களில் நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்- விஜயகாந்த்!
தே.மு.தி.க நிறுவன தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளிகள் வரை, காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வது என்ற அரசின் முடிவு கடும் கண்டனத்துக்குரியது.
2013, 2014, 2017, 2019-ம் ஆண்டுகளில் தமிழக அரசு நடத்திய இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான, ஆசிரியர் தகுதித்தேர்வில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்று, கடந்த 9 ஆண்டுகளாக அரசுப்பணிக்காக காத்து கிடக்கின்றனர்.
இவர்கள் அனைவருக்கும் பணி வழங்கப்படும் என தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்ததாகவும், தற்போது அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்ந்துள்ளதை கவனத்தில் கொண்டு, வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பாக எண்ணி,
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றுள...