
கொரோனா பரவல் காரணமாக உலக நாடுகள் முழுவதும் முகக்கவசம் அணிய கட்டாய படுத்தும் வேளையில் இஸ்ரேலில் முகக்கவசம் அணிய விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கடந்த 2019 முதல் கொரோனா பரவல் காரணமாக பல கோடி உயிர்கள் பலியாகி வருகிறது. எனவே, இந்த தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க அந்நாட்டு அரசு பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும், முகக்கவசம் அணியாமல் பொதுஇடங்களில் சுற்றுதல், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் மற்றும் தண்டனையும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், இஸ்ரேலில் தற்போது முகக்கவசம் அணிய விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலில் உள்ள 93 லட்ச பொதுமக்களில் 53 சதவீத மக்களுக்கு இரு தவணையாக தடுப்பூசி செலுத்தப்பட்டு இரு வாரங்கள் ஆன நிலையில் 68 % மக்களுக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி உருவாகிவிட்டதால் கட்டுப்பாடுகளை இஸ்ரேல் தளர்த்தியுள்ளது.
அதன் அடிப்படையில் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் இல்லாமல் சுதந்திர காற்றை சுவாசிக்கலாம் எனவும், கூட்டம் அதிகமுள்ள இடங்களில் மட்டும் முகக்கவசம் கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உலகிலேயே தற்போது கொரோன தடுப்பூசி மூலம் மீண்ட ஒரே நாடாக இஸ்ரேல் காணப்படுகிறது.
