பிரேசிலை உலுக்கும் கொரோனா – ஒரே நாளில் 83,367 பேருக்கு பாதிப்பு உறுதி!
உலக அளவில் கொரோனா பாதிப்புகளில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அதைத்தொடர்ந்து இந்தியவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளது.
பிரேசில் நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 83,367 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என தேசிய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 58 லட்சத்து 98 ஆயிரத்து 558 ஆக உயர்வடைந்து உள்ளது. அந்நாட்டில் 2,527 பேர் உயிரிழந்து உள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 44 ஆயிரத்து 391 ஆக உயர்ந்து உள்ளது.
கொரோனா பெருந்தொற்று ஏற்பட்ட பின்னர் இதுவரையில் 1 கோடியே 43 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். 10 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
511 Views