வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

பைனான்சியர் அன்புச்செழியனுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்: வெளிநாடுகளுக்கு செல்வதை தடுக்க நடவடிக்கை

 

இயக்குனர் சசிக்குமாரின் மைத்துனர் அசோக்குமார், பைனான்சியர் அன்புச்செழியனிடம் கடன் வாங்கியிருந்தார். கடன் நெருக்கடி அதிகரித்த நிலையில், அசோக்குமார் தற்கொலை செய்துகொண்டார். கந்துவட்டி கொடுமை காரணமாக அசோக்குமார் தற்கொலை செய்துகொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அசோக்குமாரிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டி தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

போலீசார் தேடுவதை அறிந்த அன்புச்செழியன் குடும்பத்தினருடன் தலைமறைவாகிவிட்டார். அவரை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், அன்புச்செழியனுக்கு எதிராக காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ்  அனுப்பி உள்ளது. வெளிநாடுகளுக்கு அவர் தப்பிச் செல்வவதை  தடுக்கும் வகையில் அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

 

198 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன