
சேலம் வாழப்பாடி அருகே குடிபோதையில் தகராறு செய்த நபர் மீது போலீஸ்காரர் லத்தியால் தாக்குதல்: குடிபோதையில் தகராறு செய்த நபர் மரணம்!
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பாப்பநாயகன்பட்டி சோதனைச்சாவடியில் மதுபோதையில் காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபரை, காவலர் லத்தியால் தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நபர் உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
போதையில் வந்த முருகேசன் என்பவரின் பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர். பைக்கை பறிமுதல் செய்த போலீசாரை போதையில் இருந்த முருகேசன் சில வார்த்தைகளை அநாகரிகமாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், போலீஸ்காரர் ஒருவர் லத்தியால் தாக்கினார். லத்தியால் போலீஸ்காரர் அடித்த நிலையில் முருகேசன் மயங்கி விழுந்தார்.
சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் மதுபோதை முருகேசன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தகவல். முருகேசன் உயிரிழப்பிற்கு காரணம் என்ன என போலீசார் விசாரணை.
உறவினர்கள் புகாரால் முருகேசனை கடுமையாக தாக்கிய எஸ்.ஐ.பெரியசாமி கைது செய்யப்பட்டு உள்ளார்.
