புதன்கிழமை, ஏப்ரல் 24
Shadow

கோலியின் புதிய வியூகம்: ஆச்சர்யத்தில் மூழ்கிய ரசிகர்கள்!

கோலியின் புதிய வியூகம்: ஆச்சர்யத்தில் மூழ்கிய ரசிகர்கள்!

டி20 உலக கோப்பையில் இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் கே.எல். ராகுல், ரோகித் சர்மா, இஷான் கிஷன், விராட் கோலி, ரிஷாப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, ஷர்துல் தாகூர், முகமது ஷமி, வருண் சக்ரவர்த்தி, பும்ரா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
ரோகித் சர்மா- கே.எல். ராகுல் அல்லது இஷான் கிஷன்- கே.எல். ராகுல் ஆகியோரில் ஏதாவது ஒரு ஜோடி களம் இறங்கும் என ரசிகர்களும், நியூசிலாந்து பந்து வீச்சாளர்களும் எதிர்பார்த்தனர். ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்திய அணி சர்ப்ரைஸ் அளித்தது.
கே.எல். ராகுல், இஷான் கிஷன் ஆகியோரை தொடக்க வீரர்களாக களம் இறக்கினார் விராட் கோலி. இது இந்திய ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது. மேலும், நியூசிலாந்து பந்து வீச்சாளர்களும் திகைத்தனர்.
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி பந்தில் ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். நியூசிலாந்து அணியில் டிரென்ட் போல்ட் உள்ளார். இவரும் இடது கை சுழற்பந்து வீச்சாளர். முதல் ஓவரில் லேசான ஸ்விங் இருந்தால், அது ரோகித் சர்மாவுக்கு நெருக்கடியை கொடுக்கும். இதை கணக்கில் வைத்து இந்தியா வியூகம் வகுத்துள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
129 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன