சனிக்கிழமை, ஏப்ரல் 27
Shadow

ஜெயலலிதா வீட்டு சாவி தீபாவிடம் ஒப்படைப்பு

ஜெயலலிதா வீட்டு சாவி தீபாவிடம் ஒப்படைப்பு

ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது வாரிசுகளான அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

சென்னை போயஸ் கார்டனில் இருந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான வேதா நிலையம் அரசுடைமை ஆக்கப்பட்டது. இதற்கு  இழப்பீட்டு தொகையாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் மகன் தீபக் ஆகியோருக்கு அரசு சார்பில் 67.9 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.  ஆனால் இதை எதிர்த்து தீபா ,  தீபக் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வேதா  நிலையம் தனிநபர் சொத்து என்பதால் ,அதை கையகப்படுத்த யாருக்கும் அதிகாரம் இல்லை எனவும் வாரிசுதாரர்களான  தங்களிடம் சொத்தை ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.  இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் வேதா நிலையம் இல்லத்தை அரசுடைமை ஆக்கியது செல்லாது என்றும் ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட தீபா, தீபக்கிடம் மூன்று வாரங்களுக்குள் வீட்டை ஒப்படைக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது.


இதையடுத்து சாவியை பெறுவதற்காக தீபா, தீபக் இருவரும் இன்று சென்னை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். வீட்டுச்சாவியை கலெக்டர் விஜயராணி அவர்களிடம் வழங்கினார்.

இதுபற்றி கலெக்டர் விஜயராணி கூறும்போது, ‘நீதிமன்ற உத்தரவின்படி வீட்டுச்சாவியை கேட்டு தீபா, தீபக் இருவரும் மனு செய்து இருந்தனர். இது குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று ஆலோசிக்கப்பட்டது. அதன்பேரில் இன்று போயஸ் இல்ல சாவி அவர்களிடம் வழங்கப்பட்டது’ என்றார்.

344 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன