செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 23
Shadow

பிரதமர் மோடி கூறும் பொய்களை டெலிப்ராம்ப்டரால்கூட ஏற்றுக் கொள்ள முடியவில்லை – ராகுல் காந்தி கிண்டல்

 

பிரதமர் மோடி கூறும் பொய்களை டெலிப்ராம்ப்டரால்கூட ஏற்றுக் கொள்ள முடியவில்லை – ராகுல் காந்தி கிண்டல்

ஐரோப்பிய நாடான ஸ்விட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் உலக பொருளாதார மாநாடு நடைபெற்று வருகிறது.
இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் உரையாற்றி வருகின்றனர்.
இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடியும் காணொளி மூலம் உரையாற்றினார்.
பிரதமர் மோடி பேசிக் கொண்டிருந்த, டெலிபிராம்ப்டர் இயந்திரம் தொழில்நுட்ப கோளாறால் நின்றது.
இதன் காரணமாக மோடி சில நிமிடங்கள் பேசாமல் அப்படியே நின்றார்.
இந்த வீடியோவை பகிர்ந்து எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பலர் கிண்டலடித்து வருகின்றனர்
இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி,
‘பிரதமர் மோடி கூறும் பொய்களை டெலிப்ராம்ப்டரால்கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
பிரதமர் மோடியால் சொந்தமாகப் பேச முடியாது’ என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
https://twitter.com/onlykodanki/status/1483497457686581249
334 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன