பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு எண்ட்ரியாக வரும்படி நடிகை கஸ்தூரியை நெட்டிசன் ஒருவர் அழைக்க,
அதற்கு அந்த பொய்யான நிகழ்ச்சிக்குப் பின்னால் ஓடுவதற்கு எனக்கு நேரம் கிடையாது என பதிலளித்திருக்கிறார் கஸ்தூரி.
‘பிக் பாஸ் அல்டிமேட்’ தமிழ் ரியாலிட்டி ஷோ சில தினங்களுக்கு முன்னர் பிரமாண்டமாக தொடங்கியது.
இதில் சுரேஷ் சக்ரவர்த்தி, அபினய், நிருப், வனிதா விஜயகுமார், பாலாஜி முருகதாஸ், ஜூலி, சுருதி, அனிதா சம்பத், தாமரை, ஷாரிக், தாடி பாலாஜி, சினேகன் மற்றும் அபிராமி ஆகியோர் போட்டியாளர்களாக இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில் ஒருவர் நடிகை கஸ்தூரியிடம், ’ஏன் நீங்கள் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளவில்லை.
வைல்ட் கார்டு எண்ட்ரியில் உள்ளே செல்ல முயற்சி செய்யுங்கள்’ என்று கூறினார்.
Well, I have a family and fulfilling work to attend to. No time for toxicity then or now. And certainly no time to run behind fake show TVs for payment. You need to take your twisted expectations elsewhere.#BiggBossUltimate https://t.co/IyJdKMCUNE
— Kasturi Shankar (@KasthuriShankar) January 31, 2022
அதற்கு பதிலளித்த கஸ்தூரி, ‘எனக்கு குடும்பம் மற்றும் பூர்த்தி செய்ய வேண்டிய வேலைகள் இருக்கின்றன. நச்சுத்தன்மைக்கு எப்போதும் நேரமில்லை.
பணம் கிடைக்கிறது என்பதற்காக போலியான டிவி நிகழ்ச்சியின் பின்னால் ஓடுவதற்கு நிச்சயமாக நேரமில்லை.
உங்கள் திரிக்கப்பட்ட எதிர்பார்ப்புகளை வேறு இடத்திற்கு கொண்டு செல்லவும்’ எனத் தெரிவித்திருக்கிறார்.
ஏற்கனவே கஸ்தூரி அவர் சொல்லும் போலியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.