
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ஆம் தேதி இன்று தனது நான்காவது பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.
கோவா, உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 4 மாநில தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் சூழலில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
கொரோனா 3வது அலையால் மக்கள் மேலும் பாதிக்கப்பட்டிருப்பதால், அனைத்து துறையினரும் இந்த பட்ஜெட்டை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றன.
2022 -23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் இரண்டு அவைகளிலும் நேற்று தொடங்கியது.
அதைத் தொடர்ந்து பொருளாதார ஆய்வறிக்கையை சீதாராமன் தாக்கல் செய்வார்.
ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன் இந்த ஆய்வறிக்கை சமர்பிக்கப்படும். கடந்த ஓராண்டில் நாட்டின் பொருளாதாரம், எதிர்கொள்ளக்கூடிய சவால்கள் மற்றும் அவற்றின் சாத்தியமான தீர்வுகள் குறித்த தகவல்கள் இதில் இடம்பெறும்.
மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ஆம் தேதி காலை 11 மணிக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்படும்.
அதன்பிறகு முதல் கூட்டத்தொடர் பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை நடைபெறும். இரண்டாம் கூட்டத் தொடர் ஒரு மாத கால இடைவெளியில் மார்ச் 14 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி நிறைவடையும்.
பட்ஜெட் இன்று தாக்கல் செயப்படுவதால் எதற்கெல்லாம் விலை குறையும், எதெல்லாம் விலை அதிகரிக்கும், அத்தியாவசிய விலயேற்றம் குறித்த கவலையுடன் சாமானிய மக்கள் காத்திருக்கிறார்கள்
