திங்கட்கிழமை, ஏப்ரல் 29
Shadow

“பா.ஜ.க.வின் பொய் வாக்குறுதிகளில் மயங்கி விடாதீர்கள்” உ.பி மக்களுக்கு மம்தா வேண்டுகோள்

 

பா.ஜ.க.வின் பொய் வாக்குறுதிகளில் மயங்கி விடாதீர்கள், சமாஜ்வாடி கட்சியை வெற்றி பெறச் செய்து பா.ஜ.க.வை தோற்கடிக்கும்படி உத்தர பிரதேச மக்களுக்கு மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்தார்.

உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் சமாஜ்வாடி கூட்டணிக்கு திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.

மேலும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவியும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி நேற்று முன்தினம் இரண்டு நாள் பயணமாக உத்தர பிரதேசம் சென்றார்.

இந்த பயணத்தின் போது சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவுடன்  மம்தா பானர்ஜி  கூட்டு செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்.

லக்னோவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது: சமாஜ்வாடி கட்சியை ஆதரித்து அவர்களை வெற்றி பெறச் செய்து, பா.ஜ.க.வை தோற்கடிக்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். பா.ஜ.க.வின் பொய் வாக்குறுதிகளில் மயங்கி விடாதீர்கள். மார்ச் 3ம் தேதி வாரணாசிக்கு வருவேன்.

கோவிட்-19ன் போது உத்தர பிரதேசத்தில் கங்கை நதியில் வீசப்பட்ட உடலகள், ஹதாஸ் மற்றும் உன்னாவ் சம்பவங்களுக்கு காரணமானவர்களை வரலாறு ஒரு போதும் மன்னிக்காது. யோகி ஜி, இவைகள் நடக்கும் போது நீங்கள் எங்கே இருந்தீர்கள்? உத்தர பிரதேச மக்களிடம் யோகி ஜி மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

373 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன