புதன்கிழமை, மே 15
Shadow

தமிழகத்தில் பாஜக வால் ஆட்டாமல் இருப்பதற்கு இதுதான் காரணம்! திருமாவளவன் எம்.பி சொன்ன ரகசியம்!!

 

கடலூர் மாநகராட்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அவர், 1-வது வார்டில் போட்டியிடும் புஷ்பலதா அவர்களை ஆதரித்து செம்மண்டலம் நான்குமுனை சந்திப்பில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தததில் இருந்து, தலைசிறந்த, வளர்ச்சி மிகுந்த மாநிலமாக சாதனை புரிந்துள்ளது என்று கூறினார்.

இந்தியாவின் தலை சிறந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் என்று சர்வே முடிவுகள் மூலம் தெரிய வந்துள்ளது என்றும், சட்டப்பேரவைத் தேர்தலின் போது அதிமுக தலைமையில் பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்தன.

ஆனால் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவித்த பிறகு அந்த கூட்டணி சிதறி  போனது. இது அதிமுக ஒற்றுமையாக இல்லை என்பதையே காட்டுகிறது.

கூட்டணியில் அதிமுக ஒருபுறம் பாமக ஒருபுறம் பாஜக ஒருபுறம் என தனித்தனியாக செயல்பட்டது இதனாலேயே அந்த கூட்டணி சிதைந்து போனது.

ஆனால், திமுக சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி கட்டுக்கோப்பாக அமைத்தது. அதே கூட்டணி தான் உள்ளாட்சித் தேர்தலிலும் அமைந்துள்ளது.

அதிமுக கூட்டணி பலவீனம் அடைந்தது. அதேநேரம், திமுக கூட்டணி அதே கட்டுக்கோப்பாக பலமாக நிலைத்து நிற்கிறது என்று தெரிவித்தார்

 

தொடர்ந்து பேசிய திருமாவளவன், அதிமுக கூட்டணியில் நல்ல தலைமை இல்லை என்றும், அதிமுகவிற்கு தலைவர்களே இல்லை என்றும் கூறினார்.

மேலும்,  ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுகவிற்கு பொதுச்செயலாளர் பதவிக்கு ஆளே இல்லை. கட்சித் தலைவரையும் பொதுச் செயலாளரையும் அவர்களால் அமைக்க முடியவில்லை.

அதிமுகவிற்கு நல்ல ஆற்றல் மிக்க தலைவர் இல்லை. என்றும், திமுகவிற்கு கிடைத்தது போல நல்ல ஆளுமை வாய்ந்த தலைவர் அதிமுகவிற்கு இல்லை என்பதை மக்கள் நன்கு அறிந்துள்ளார்கள் எனவும் கூறினார்.

தமிழ்நாட்டின் மதவெறி சக்திகள் ஆக்கிரமிக்க முயற்சித்து வருகிறார்கள், ஊடுருவ நினைக்கிறார்கள்,

ஆர்எஸ்எஸ் சங்பரிவார் அமைப்புகள் மூலம் மறைமுகமாக முகமூடிகளை அணிந்து கொண்டு தமிழகத்தில் ஊடுருவ நினைக்கிறார்கள் என்று விமர்சித்த திருமாவளவன்,

இந்தியாவில் எல்லா மாநிலத்திலும் அவர்களால் ஆளுமை செலுத்த முடிகிறது ஆனால் தமிழகத்தில் வால் ஆட்ட முடியவில்லை காரணம் அவர்கள் வாலாட்டினால் வாலை ஒட்ட நறுக்க கூடிய ஆட்சி  மற்றும் திமுக கூட்டணி இங்கு உள்ளது என்றார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக ஆட்சிக்கு வந்திருந்தால் இங்கே அதிமுக ஆட்சியாக இருந்திருக்காது, மாறாக கைப்பவை கட்சியாகத் தான் இருந்திருக்கும், ஏனென்றால் கடந்த 5 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியை நடத்திவந்தது பாஜகதான்.

அவர்கள் அதிமுக ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காகவே அவர்கள் கட்டுப்பாட்டிலேயே செயல்பட்டு வந்தனர் என்றும் அவர் பேசினார்.

அத்துடன், மக்களாகிய நீங்கள் அனைவரும் இன்னும் தலைசிறந்த தமிழகம் முன்னேற திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினருக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் திருமாவளவன் கேட்டுக்கொண்டார்.

179 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன