குஜராத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றியை நெருங்கி வந்து ஆட்சியை கைப்பற்ற இயலாமல் தோல்வி கண்டது. மொத்தம் காங்கிரஸ் கூட்டணி 80 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆட்சியை பிடித்த பா.ஜனதாவுக்கு 99 இடங்கள் கிடைத்தன.
இந்த நிலையில் காங்கிரசுக்கு ஏற்பட்ட தோல்வி குறித்து மண்டல வாரியாக ஆய்வு செய்வதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேற்று குஜராத் மாநிலம் வந்தார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் அவர் சவுராஷ்டிரா பகுதியில் உள்ள கேசோத் விமான நிலையத்தை வந்தடைந்தார்.
பின்னர் அங்கிருந்து கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள பிரசித்த பெற்ற சோம்நாத் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். தேர்தல் நடப்பதற்கு முன்பாகவும் ராகுல்காந்தி இந்த சிவன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தது நினைவு கூறத்தக்கது
354 Views