வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

திமுக, தினகரன் கூட்டு எனும் வாதம் தோற்றவர்களின் புலம்பல்: விஜயகாந்த் விமர்சனம்

சென்னை சின்னமலை தேவாலயத்தில் கிருத்துமஸ் தினவிழா கொண்டாட்டத்தில் கலந்துக்கொண்ட பின்னர் செய்தியாளர்களை விஜயகாந்த் சந்தித்தார். அப்போது அவரிடம் ஆர்.கே.நகர் தேர்தலில் அதிமுக தோல்விக்கு திமுகவும், டிடிவி தினகரனும் கூட்டுச்சேர்ந்து சதி செய்து வென்றதாக குற்றம் சாட்டப்படுவது பற்றி கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த விஜய்காந்த் அது தோற்றவர்களின் புலம்பல் அவர்கள் அப்படித்தான் சொல்வார்கள், தோற்றவர்கள் எதாவது ஒன்று சொல்லிக்கொண்டு இருப்பார்கள். தினகரன் வென்றுவிட்டார் அல்லவா அப்படித்தான் சொல்வார்கள். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அந்த வெற்றிடம் டிடிவியால் நிரப்பப்பட்டுள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது அதை பொதுத்தேர்தல் தான் தீர்மானிக்கும். உள்ளாட்சி தேர்தலில் யாருடன் கூட்டு என்பதை அப்போது தான் முடிவு செய்வோம் என்று விஜயகாந்த் தெரிவித்தார்

392 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன