ஞாயிற்றுக்கிழமை, மே 19
Shadow

வாய்க் கொழுப்பில் பேசி சர்ச்சையில் சிக்கி நீதிமன்றம் காலில் விழுந்து பகிரங்க மன்னிப்பு கேட்ட ஆடிட்டர் குருமூர்த்தி!

 

வாய்க் கொழுப்பில் பேசி சர்ச்சையில் சிக்கி நீதிமன்றம் காலில் விழுந்து பகிரங்க மன்னிப்பு கேட்ட ஆடிட்டர் குருமூர்த்தி!

நீதிபதி குறித்து அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஆடிட்டர் குருமூர்த்தி மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததால் கிரிமினல் அவதூறு வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

 

கடந்த 2018ல் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக அமலாக்கத்துறை எந்த ஒரு கட்டாய நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று அப்போதைய டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி முரளிதர் தலைமையிலான அமர்வு இடைக்காலத் தடை விதித்தது. அப்போது பாஜக ஆதரவாளரான ஆடிட்டர் குருமூர்த்தி பதிவிட்ட ட்வீட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

குருமூர்த்தியின் இந்த ட்வீட்டுக்கு எதிராக வழக்கறிஞர் சங்கத்தினர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் குற்றவியல் அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சித்தார்த் மிருதுல் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் முன்பாக விசாரிக்கப்பட்டு வந்தது. டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஆஜரான நீதிபதி முரளிதர், ப.சிதம்பரத்திற்கும் தனக்கும் எந்த விதமான உறவும் இல்லை என்றும், அவரிடம் தான் ஜூனியராக பணிபுரிந்ததில்லை என்றும் தெளிவுபடுத்தினார்

இதையடுத்து, குருமூர்த்தியின் மன்னிப்பு மற்றும் ஆழ்ந்த வருத்தத்தை டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு நீதிபதி எஸ்.முரளிதருக்கு எதிரான அவரது ட்வீட் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட கிரிமினல் அவமதிப்பு வழக்கில் இருந்து குருமூர்த்தியை டெல்லி உயர் நீதிமன்றம் விடுவித்துள்ளது

 

ஏற்கனவே இதே போன்று நீதிமன்றத்தை மிக கேவலமாக விமர்சித்து விட்டு கடைசியில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட்தால் ஹெச் ராஜா விடுவிக்கப்பட்ட்து குறிப்பிட்த்தக்கது.

மொத்த்த்தில் இந்த கும்பல் சாவார்க்கர் பரம்பரை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறாது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

 

276 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன