
“அநீதி” அசத்துகிறதா? அசதியை ஏற்படுத்துதா? கோடங்கி விமர்சனம் 2.5/5
வெயில்,அங்காடி தெரு என யதார்த்தங்களை பதிவு செய்த வசந்த பாலனின் அடுத்த படைப்புதான் “அநீதி”
பணக்கார வீட்டில் வேலைக்காரர்கள் மீது அன்றாடம் நடக்கும் “அநீதி” அவலத்தை ஆவேசமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் வசந்தபாலன்.
அர்ஜுன் தாசின் ஆக்ரோஷமான சைக்கோத்தனம் சில இடங்களில் அட டாவும்… பல இடங்களில் அய்யோவும் போட வைக்கிறது. நல்ல மேனரிசம்… அந்த குரலும் கைகொடுக்கிறது… ஆனால் அத்தனை ஆக்ரோஷம் அதிகம்!
படத்துக்கு படம் துஷாரா விஜயனின் உழைப்புக்கு கண்டிப்பாக பலன் உண்டு… பணக்கார வீட்டு வேலைக்காரியாக வாழ்ந்திருக்கிறார்…
பணக்கார பெண்ணாக வரும் சாந்தா தனஜெயன் பணக்கார திமிரிலும், பாசத்துக்கு ஏங்கும் தாயாகவும் அசத்துகிறார்… வெளி நாட்டில் வசிக்கும் ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் இந்த கதாபாத்திரம் நெத்தியடி செய்திதான்.
இயக்குனர்கள் பலர் நடிகராக மாறிய காலம் போய் தயாரிப்பாளர்கள் நடிகராக மாறி வருகிறார்கள்… அந்த வகையில் போலீஸ் அதிகாரியாக கொஞ்ச நேரமே வந்தாலும் கை தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி தனது பங்களிப்பை அசத்தி இருக்கிறார் ஜே.எஸ்.கே.
ஜிவி பிரகாஷ் இசை பல இடங்களில் படத்தை நகர்த்த உதவி இருக்கிறது
மொத்தத்தில் ஆயுதத்தால் நீதியை பெற முடியாது என்ற போதும் ஹீரோ அர்ஜுன் தாசின் ஆக்ரோஷத்தை கொஞ்சம் குறைத்து, வனிதாவின் ஓவர் ஆக்டிங்கை இல்லாமல் செய்து திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தி இருந்தால் “அநீதி” அசத்தி இருக்கும்… But இப்போ அசதி அதிகமா இருக்கு!
கோடங்கி
2.5/5

