சீமானின் “பிசுறு” பேச்சால் ஒதுங்கியிருந்த காளியம்மாள் “நாம் தமிழர்” கட்சியிலிருந்து விலகல்!
நாம் தமிழர் கட்சியின் நட்சத்திர பேச்சாளரான காளியம்மாள் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமானுடன் நிலவும் கருத்து முரண்பாடு காரணமாக விலகியே இருந்தார். சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் காளியம்மாள் விலகுவதாக இருந்தால் விலகி கொள்ளட்டும் என பேசினார்.
இந்நிலையில் காளியம்மாள் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் : கடந்த 6 வருடகாலமாக ஒரு சமூக மாற்றத்திற்காக ஒரு பெண்ணாக இருந்து எவ்வளவு போராட முடியுமோ, என் ஆற்றலையும் மீறி உங்கள் எல்லோர் அன்பாலும், நம்பிக்கையாலும் இந்த களத்தில் நின்றிருக்கிறேன். எனினும் காலத்தின் சூழல், உயிராக எண்ணி, வழிநடந்த நாம் தமிழர் கட்சி எனும் இந்த பாதை இத்துடன் முடித்து வைக்கப்படுகிறது என்பதை மிகவும் வருத்தத்துடன், கனத்த இதயத்துடனும் தெரிவித்துக்கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
சமீப காலமாக சீமானின் நடவடிக்கைகள் பிடிக்காமல் அக்கட்சியில் இருந்து பலரும் விலகி வரும் நிலையில் தற்போது காளியம்மாள் விலகியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் நட்சத்திர பேச்சாளரான காளியம்மாள் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமானுடன் நிலவும் கருத்து முரண்பாடு காரணமாக விலகியே இருந்தார். சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் காளியம்மாள் விலகுவதாக இருந்தால் விலகி கொள்ளட்டும் என பேசினார்.
இந்நிலையில் காளியம்மாள் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் : கடந்த 6 வருடகாலமாக ஒரு சமூக மாற்றத்திற்காக ஒரு பெண்ணாக இருந்து எவ்வளவு போராட முடியுமோ, என் ஆற்றலையும் மீறி உங்கள் எல்லோர் அன்பாலும், நம்பிக்கையாலும் இந்த களத்தில் நின்றிருக்கிறேன். எனினும் காலத்தின் சூழல், உயிராக எண்ணி, வழிநடந்த நாம் தமிழர் கட்சி எனும் இந்த பாதை இத்துடன் முடித்து வைக்கப்படுகிறது என்பதை மிகவும் வருத்தத்துடன், கனத்த இதயத்துடனும் தெரிவித்துக்கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
சமீப காலமாக சீமானின் நடவடிக்கைகள் பிடிக்காமல் அக்கட்சியில் இருந்து பலரும் விலகி வரும் நிலையில் தற்போது காளியம்மாள் விலகியுள்ளார்.
சில வாரங்களுக்கு முன்பு நாம் தமிழர் கூட்டத்தில் சீமான் இருக்கும் போதே காளியம்மாள் பேசும் போது, “இலங்கைக்கு திரைப்பட இயக்குநராக சினிமா படம் எடுக்கப் போய் பிரபாகரனுடன் வெறும் 10 நிமிடம்தான் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார் என்று பேசியது
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிட்த்தக்கது.
ஏற்கனவே சீமானின் ஆமைக்கறி, ஆஸ்திரேலிய அரிசி கப்பலை சுட்ட கதை, இட்லிக்குள் கறி கதை என சீமான் அள்ளிவிட்டு திரள் நிதி திரட்டி வரும் சூழலில் பிரபாகரன் அவர்களை சீமான் 10 நிமிடம் தான் பார்த்தார் என்ற காளியம்மாள் பேச்சு சீமானின் பித்தலாட்டங்களை அம்பலப்படுத்தியதாக மாறிப்போனது குறிப்பிட்த்தக்கது.
இந்த சூழலில்தான் காளியம்மாள் இந்த விலகல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்த விலகல் அறிக்கையில் எந்த இடத்திலும் சீமானின் பெயரைக் கூட பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.