#srilanka #srilankanews #srilankpoliticalcrisis #srilankan
புலம் பெயர்ந்த தமிழர்கள் முயற்சித்தால் இலங்கையை காப்பாற்றலாம்!? கோடங்கி பார்வை
https://www.youtube.com/watch?v=VxxelmgRyqU
இலங்கை, பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அங்கு பெட்ரோல், டீசல், அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
எரிபொருள் இறக்குமதி செய்வதற்கு அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால் இலங்கை அரசு திணறுகிறது.
இந்தியா, உலக வங்கி ஆகியவை கடனுதவி அளித்த நிலையில் அந்த நிதிகள் தீர்ந்து உள்ளதால் இலங்கையில் மீண்டும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியா, உலக வங்கியிடம் இலங்கை அரசு மீண்டும் நிதியுதவி கேட்டுள்ளது.
இந்த நிலையில் நிதியுதவி வழங்க இலங்கைக்கு உலக வங்கி நிபந்தனை விதித்துள்ளது. இது தொடர்பாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இலங்கைக்கு ஒரு கடன் திட்டம் அல்லது புதிய கடன் உறுதிப்பாடுகளை முன்னெடுக்க உலக வங்கி திட்டமிட்டுள்ளதாக பல தவறான தகவல் வெளியாகியுள்ளன.
“இலங்கை மக்கள் மீது நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம். பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் ப...
கொரோனா தொற்றுக்கு பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது.
இலங்கைக்கு வந்து கொண்டு இருந்த அன்னிய செலாவணி வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இலங்கையின் பணம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது. இதனால் கடுமையான எரி பொருள் பற்றாக்குறை நிலவுகிறது.
பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதோடு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இக்கட்டான சூழ்நிலையில் இலங்கைக்கு இந்தியா 40 ஆயிரம் டன் டீசல் வழங்கியது.
தொடர்ந்து 1,20,000 டன் டீசல் மற்றும் 40 ஆயிரம் டன் பெட்ரோல் வினியோகம் செய்தது. பழைய பாக்கியை கொடுக்க இலங்கையிடம் பணம் இல்லாதால் துறைமுகத்தில் கப்பல் காத்திருக்கிறது.
இந்த நிலையில் இலங்கையில் இன்று பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.
பெட்ரோல் விலை 24.3 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதனால் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.420க்கு விற்பனையானது....
பொருளாதார நெருக்கடியால் பெரும் அரசியல் குழப்பத்தில் சிக்கியுள்ள இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நேற்று பதவியேற்றார். புதிய மந்திரிசபை இன்று பதவியேற்க உள்ளது.
இலங்கையின் புதிய அரசுக்கு இந்தியா ஆதரவு தெரிவித்து உள்ளது. ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான புதிய அரசுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருப்பதாக கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் கூறியுள்ளது.
இது தொடர்பாக தூதரகத்தின் டுவிட்டர் தளத்தில், ‘அரசியல் நிலைத்தன்மையை இந்தியா நம்புகிறது. ரணில் விக்ரமசிங்கே இலங்கையின் பிரதமராக பதவியேற்றுள்ளதன் அடிப்படையில் ஜனநாயக வழிமுறைகளுக்கு இணங்க உருவாக்கப்பட்ட இலங்கை அரசுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளது’ என குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதைப்போல இலங்கை மக்களுக்கான உதவிகள் தொடரும் எனவும் தூதரகம் தெரிவித்து உள்ளது....
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் கடும் இன்னல்களுக்கு உள்ளான மக்கள் தொடர் போராட்டத்தை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் போராட்டம் தீவிரமாகி தற்போது வன்முறை, அரசியல் நெருக்கடி என அந்நாட்டில் பரபரப்பான சூழல்கள் அரங்கேறி வருகின்றன.
அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவி விலக கோரி கடந்த மாதம் 9-ந்தேதி மக்கள் போராட்டத்தை தொடங்கினர்.
அதிபர் மாளிகை முன்பு உள்ள காலி திடலில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் இலங்கை அரசுக்கு எதிர்க்கட்சிகளும் கடும் நெருக்கடி அளித்தன.
மக்களின் தொடர் போராட்டத்தால் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே கடந்த 9-ந்தேதி ராஜினாமா செய்தார். இதனால் மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
போராட்டக்காரர்கள் மீது கடும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
போராட்டக்காரர்கள் எதிர் தாக்குதலில...
பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கையில் சமையல் கியாசுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
இதனால் கியாஸ் நிரப்பும் மையங்களில் மக்கள் நாள் கணக்கில் காத்திருந்து கியாஸ் பெற்று செல்கின்றனர்.
இந்த நிலையில் சமையல் கியாஸ் கையிருப்பு தீர்ந்து விட்டதால், நாடு முழுவதும் சமையல் கியாஸ் வினியோகம் நிறுத்தப்பட்டு இருக்கிறது.
புதிய கையிருப்பு வரும் வரை கியாஸ் வினியோகம் செய்ய முடியாது என இலங்கையின் முன்னணி கியாஸ் நிறுவனமான லிட்ரோ கியாஸ் லங்கா லிமிடெட் நிறுவனம் அறிவித்து உள்ளது.
தற்போதைய நிலையில் தொழிற்சாலைகளுக்கான கியாஸ் மட்டுமே கையிருப்பு இருப்பதால், சமையல் கியாசுக்காக மக்கள் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என அந்த நிறுவன தலைவர் விஜிதா ஹெராத் தெரிவித்து உள்ளார்.
அடுத்த கியாஸ் தொகுப்பு வருகிற வெள்ளி அல்லது சனிக்கிழமை தான் வரும் எனவும் அவர் கூறியுள்ளார்....
இலங்கையில் வரலாறு காணாத அளவில் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது.
அத்தியாவசிய மற்றும் உணவு பொருட்கள் விலை உயர்வால் கடும் அவதிப்படும் அந்நாட்டு மக்கள் அதிபர் கோத்தபய அலுவலகத்திற்கு வெளியே தொடர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்றும் அதிபர் மாளிகை முன்பு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிபர் கோத்தபய உடனடியாக பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
எதிர்ப்பாளர்கள் அனைவரையும் தீவிரவாதிகள் என்று கோத்தபய அறிவித்ததால் பொதுமக்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
போராட்டம் நடத்தியவர்களில் பலர் கைது செய்யப்பட்டிருப்பதாக முன்னணி பல்கலைக்கழகமான என்யுஎஸ் தெரிவித்துள்ளது.
மாணவர்கள், விவசாயிகள் மற்றும் நீதித்துறையினர் அனைவரும் ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டு "இனி ராஜபக்சேக்கள் ...
தமிழகத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம், சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்ததுடன், அதில் வெற்றியும் கிடைத்தது.
இந்த போராட்டத்தின் ஆரம்பத்தில் இருந்து மாணவர்கள் மிகத் தீவிரமாக கலந்து கொண்டு ஜல்லிக்கட்டு போராட்டத்தை வெற்றியடைய வைத்தனர்.
இதைப் போலவே இலங்கையில் தற்போது அரசுக்கு எதிராக மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம், அந்நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியை சரி செய்ய வலியுறுத்தியும், ஆட்சியாளர்களை பதவி விலகக் கோரியும் இலங்கை தலைநகர் கொழும்புவில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
காலையில் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், மாலையில் பூங்காக்கள், பிரதான சாலைகள் உள்ளிட்ட இடங்களில் கூடி கையில் பதாகைகளை ஏந்தி அமைதி வழியில் போராடி வருகின்றனர்.
அரசியல் தலைவர்களுக்கு கல்வி அறிவு வழங்க வேண்டும், பொருளாதார நெருக்கட...
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் உணவு பொருட்கள், எரிபொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
பல மணி நேர தொடர் மின்வெட்டால் மக்கள் துயரங்களை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 36,000 மெட்ரிக் டன் பெட்ரோல் மற்றும் 40,000 மெட்ரிக் டன் டீசல் ஆகியவற்றை இலங்கைக்கு இந்தியா வழங்கி உள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
சரக்கு கப்பல் மூலம் இது விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடிக்கு உதவும் நடவடிக்கையாக இந்தியா இலங்கைக்கு வழங்கிய 500 மில்லியன் அமெரிக்க டாலர் எண்ணெய்க் கடனின் ஒரு பகுதியாக இந்த எரிபொருள்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தமது நாட்டுக்கு இந்தியா பெரிய அளவில் உதவி செய்துள்ளதாக பிரதமர் மோடிக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் அமைச்சருமான, அர்ஜூன ரணதுங்கா பாராட்டு தெரிவ...
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் மற்றும் மக்கள் தெருவில் இறங்கி போராடி வருகிறார்கள்.
போராட்டம் தீவிரமடைந்த நிலையில், நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் அமல்படுத்தப்பட்ட 36 மணி நேர ஊரடங்கு இன்று காலை முடிவுக்கு வந்தது.
இதற்கிடையே, இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டு இலங்கை அமைச்சர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக நேற்று பதவி விலகினர்.
இதையடுத்து, இலங்கையில் அனைத்துக் கட்சி அமைச்சரவை அமைக்க இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச அழைப்பு விடுத்தார்.
அமைச்சர் பதவிகளை ஏற்று பொருளாதார நெருக்கடியை தீர்க்க உதவ வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில், இலங்கையில் புதிய அமைச்சர்களை நியமித்து அதிபர் கோட்டாபய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.
இதில், நிதி அமைச்சராக அலி சப்ரியும், கல்வி அமைச்சரா...