செவ்வாய்க்கிழமை, மே 14
Shadow

சினி நிகழ்வுகள்

“காத்து வாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்தின் டீசர் !

“காத்து வாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்தின் டீசர் !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  *பெரும் எதிர்பார்ப்புடன் வெளியானது “காத்து வாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்தின் டீசர் !* இந்த ஆண்டில் ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் முக்கியமான படங்களின் ஒன்றான “காத்து வாக்குல ரெண்டு காதல்” படத்தின் அழகான டீசர் சற்று முன் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. தமிழ் திரையுலகில் மாறுபட்ட களங்களில் தரமான படைப்புகளை வழங்கி வரும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் வழங்க, இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நயன்தாரா,சமந்தா என தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர கூட்டணி இணைந்து நடித்திருக்கும் படம் “காத்து வாக்குல ரெண்டு காதல்”. ‘நானும் ரௌடி தான்’ படத்திற்கு பிறகு இயக்குநர் விக்னேஷ் சிவன் மீண்டும் ரொமாண்டிக் காமெடி ஜானரில் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே, ரசிகர்களிடம் எக்கசக்க எதிர்பார்ப்பு ந...
சைக்கோ த்ரில்லர் பாணியில் உருவாகும் கருப்புகண்ணாடி!

சைக்கோ த்ரில்லர் பாணியில் உருவாகும் கருப்புகண்ணாடி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  சைக்கோ த்ரில்லர் பாணியில் உருவாகும் புதிய திரைப்படம் “கருப்பு கண்ணாடி” ! PSR Film Factory  தயாரிப்பாளர் PSR பிரதீப் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் நியூட்டன்.ஜி இயக்கும் 'கருப்பு கண்ணாடி' படத்தின் படப்பிடிப்பு, இன்று சென்னை, சைதாப்பேட்டை லைட்ஸ் ஆன் ஸ்டுடியோவில் இனிதே துவங்கியது. ‘கருப்பு கண்ணாடி' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் சைக்கோ த்ரில்லர் பாணியில்,  உருவாகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பை இயக்குனர் சுப்ரமணிய சிவா கிளாப் அடித்து துவக்கி வைத்தார். கருப்பு கண்ணாடி திரைப்படத்தில் நடிகர் தணிகை, சுப்ரமணிய சிவா, துர்கா, ஜிஜினா, ராஜா சிம்ஹா, காகராஜ், பாடகர் வேல்முருகன், மாப்பு ஆண்ட்ரூஸ், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். ஒளிப்பதிவாளராக சம்சாத், இசையமைப்பாளராக சித்தார்த்தா பிரதீப், ஆகியோர் பணிபுரியவுள்ளனர்....
மாதவனின் ராக்கெட்ரி பட அப்டேட் விரைவில்!

மாதவனின் ராக்கெட்ரி பட அப்டேட் விரைவில்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  இஸ்ரோ விஞ்ஞானியாக பணியாற்றியவர் நம்பி நாராயணன். திறமையான விஞ்ஞானியாக பணியாற்றிய இவரை கடந்த 1994ம் ஆண்டு தேசதுரோக வழக்கில் காங்கிரஸ் அரசு கைது செய்தது. இதை எல்லாம் தவறு என நிரூபித்து அவர் வெளியேறி விட்டார். அவரின் வாழ்க்கை கதையை மாதவன் படமாக இயக்கி  அவரே நடித்து வருகிறார்.   இந்நிலையில் விரைவில் இந்த படம் குறித்து அப்டேட் வரும் என மாதவன் சொல்லி இருக்கிறார். அதனால் படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்....
நான்ஸ்டாப் லிப் லாக் ”மன்மதலீலை”  க்ளிப்ஸ்! சர்ச்சையில் சிக்கும் வெங்கட் பிரபு!!

நான்ஸ்டாப் லிப் லாக் ”மன்மதலீலை” க்ளிப்ஸ்! சர்ச்சையில் சிக்கும் வெங்கட் பிரபு!!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
    மன்மதலீலை திரைப்படத்தின் க்ளிம்ப்ஸை நேற்று சிம்பு வெளியிட்டார். வெங்கட்பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்திருக்கும் இந்தப் படத்தில் முதல் க்ளிப்ஸே இளைஞர்கள் மத்தியில் கிளுகிளுப்பை ஏற்படுத்தி உள்ளது. மாநாடு படத்தைத் தொடர்ந்து வெங்கட்பிரபு மன்மதலீலை திரைப்படத்தை இயக்கியுள்ளார். இது அடல்ட் காமெடி ஜானரில் தயாராகியுள்ளது. ஹாலிவுட்டில் வெளியான அமெரிக்கன் பை போன்ற ஒரு திரைப்படம் இது என வெங்கட்பிரபு கூறியிருந்தார். அவர் உதாரணத்திற்கு கூறிய திரைப்படம் முழுக்கவே இளைஞர்களின் காமத்தால் நிறைந்தது. ஏற்கனவே கோவா திரைப்படத்தில் இதுபோன்ற ஒரு கதையை வெங்கட் பிரபு முயற்சி செய்தார். ஆனால் படம் கிளிக் ஆகவில்லை. ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா அந்தப் படத்தை தயாரித்திருந்தார். ரஜினி மகளுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என்று அப்போது விமர்சனங்கள் எழுந்தன. மன்மதலீலை க்ளி...
நடிகர் ரஜினியின் 169-வது படத்தின் அறிவிப்பு!

நடிகர் ரஜினியின் 169-வது படத்தின் அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
காதலில் விழுந்தேன், எந்திரன், சர்க்கார், அண்ணாத்தே போன்ற பல படங்களை தயாரித்த நிறுவனம் சன் பிக்சர்ஸ். இந்த நிறுவனம் தற்போது விஜய்யின் பீஸ்ட், விஜய் சேதுபதியின் விஜேஎஸ்46, சூர்யாவின் எதர்க்கும் துணிந்தவன் படங்களை இயக்கி வருகிறது. இந்நிலையில் ரஜினியின் 169-வது திரைப்படத்தை இந்த நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்குகிறார். இவர் கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து அவர் இயக்கிய டாக்டர் படம் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்றது. அதன்பின் நெல்சன் அடுத்ததாக விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் அறிவிப்பை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடுவதாக படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி படத்தின் அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக...
டிக்கெட் விலை குறித்து தெலுங்கு நடிகர்கள் ஆலோசனை!

டிக்கெட் விலை குறித்து தெலுங்கு நடிகர்கள் ஆலோசனை!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி திரையரங்குகளில்  டிக்கெட் விலையை குறைத்து சமீபத்தில் ஆணை பிறப்பித்திருந்தார். இது தெலுங்கு சினிமா வட்டாரத்தில் கடும் புகைச்சலை ஏற்படுத்தியது. பல தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் டிக்கெட் விலையை குறைத்ததற்காக மாநில அரசைக் கண்டித்தனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் ஆந்திர ஐகோர்ட், மாநில அரசுக்கு தலைமைச்செயலாளர் தலைமையில் குழு அமைத்து சினிமா திரையரங்குகளில் கட்டண நிர்ணயம் செய்யுமாறு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனையடுத்து அந்த குழு, ஆந்திராவில் திரைப்பட டிக்கெட் விலையை அதிகரிப்பதற்கான அறிக்கையைச் சமர்ப்பிக்கத் தயாராக உள்ளது என ஒளிப்பதிவு துறை மந்திரி வேங்கடராமையா நேற்று தெரிவித்தார். மேலும், அவர் ஆந்திர முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியுடனான நேற்றைய சந்திப்பின் போது, குற...
ஆஸ்கர் விருது விழாவின் கட்டுப்பாடுகள்!

ஆஸ்கர் விருது விழாவின் கட்டுப்பாடுகள்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
திரையுலகின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கும் விழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக நடைபெறும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் உச்சத்தில் இருந்ததால் திரைப்படங்களின் வெளியாகும் எண்ணிக்கை குறைந்ததுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டிற்கான ஆஸ்கர் விழா பிப்ரவரி 27-ந்தேதி நடைபெறுவதாக இருந்தது. பின் மார்ச் 27-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. எப்போதும் லாஸ் ஏஞ்சல்சின் யூனியன் ஸ்டே‌ஷன்சில் நடக்கும் விழா, இந்த முறை ஹாலிவுட்டின் டால்பி தியேட்டரிலேயே நடத்த திட்டமிட்டு இருப்பதாக அகாடமி தெரிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்களுக்கு கொரோனா சான்றிதழ் காண்பிக்க வேண்டிய அவசியமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் சூர்யா தயாரித்து நடித்த ‘ஜெய்பீம்’ படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த படம் இறுதிப் பட்டியலில் இடம் பெறாதது குறிப்பிடத்தக்கது....
சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது!

சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் டாக்டர். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் 'டான்' மற்றும் 'அயலான்' படத்தில் நடித்து முடித்து இறுதிக்கட்ட பணிகள் நடந்துவருகிறது. இப்படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்தாக தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர் அனுதீப் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து சுரேஷ் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு தற்காலிகமாக 'எஸ்.கே 20' என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் 'எஸ்.கே 20' படத்தின் படப்பிடிப்பு இன்று(10.2.2022) சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் பூஜையில் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இ...
சிம்பு தொடர்ந்த வழக்கில் விஷாலின் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம்!

சிம்பு தொடர்ந்த வழக்கில் விஷாலின் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  நடிகர் சிம்பு தொடர்ந்த வழக்கில் எதிர்மனுதாரர் பட்டியலிலிருந்து தன்னை நீக்க கோரிய நடிகர் விஷாலின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் வெளியான அன்பானவன், அடங்காதவன், அசராதவன் படத்தில் நடிக்க சிம்புக்கு 8 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்ட நிலையில், படம் தோல்வி அடைந்ததையடுத்து, 1 கோடியே 51 லட்ச ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டதாக சிம்பு தரப்பில், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக, சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், நடிகர் சங்கத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் தன்னை குறித்து அவதூறு செய்தி பரப்பியதாக கூறி 1 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு மைக்கேல் ராயப்பனுக்கு எதிராக நடிகர் சிம்பு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில்,...
பொன்னியின் செல்வன் அப்டேட்!

பொன்னியின் செல்வன் அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் இயக்குனர் மணிரத்னம் இயக்கி வரும் திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. இப்படத்தை லைகா நிறுவனம் வழங்க மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனிடையே பொன்னியின் செல்வன் படத்தை முன்னணி ஓடிடி நிறுவனம் நேரடியாக ஓடிடியில் வெளியிட பெரும் தொகை கொடுத்து வாங்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் சார்பில் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் பெரும் பொருட்செலவில் “திரையரங்க வெளியீட்டுக்காகவே தயாராகி வருகிறது. ஓடிடியில் நேரடி வெளியீடு குறித்த தகவல்கள் அனைத்துமே வதந்தி. இந்தப் பிரம்மாண்டத்தைத் திரையரங்கில் மக்கள் குடும்பத்துடன்...