தமிழ்நாட்டு மருத்துவப் பட்டியலில் இடம் பெற்ற தெலங்கானாவைச் சேர்ந்த 34 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் – திருமாவளவன்
தமிழ்நாட்டுப் பட்டியலில் இடம் பெற்ற தெலங்கானாவைச் சேர்ந்த 34 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் - திருமாவளவன்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தெலங்கானாவைச் சேர்ந்த 34 பேர் தமிழ்நாட்டுப் பட்டியலில் இடம் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
மோசடியாக குடியிருப்புச் சான்றிதழ் பெற்று இப்படி இடம் பெற்றிருக்கிறார்களா? என்ற ஐயம் எழுந்துள்ளது. அவ்வாறு மோசடியில் ஈடுபட்டிருந்தால் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மாணவர்கள் 34 பேரையும் இனி மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க முடியாதபடி தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
தமிழக மாணவர்களின் மருத்துவப்...