கொரானா வெண்டிலேட்டர்கள் வாங்கியதில் ஊழல் அமைச்சர் பதவி பறிப்பு… 3 மாசம் சிறை…!
கொரானா வெண்டிலேட்டர்கள் வாங்கியதில் ஊழல் அமைச்சர் பதவி பறிப்பு... 3 மாசம் சிறை...!
தலைப்பை பார்த்ததும் ஷாக் ஆக வேண்டாம்... இது நம்மூரில் இல்லை. வெளிநாட்டு விவகாரம்...
கொரானா வைரஸ் பரவியவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் போது வென்டிலேட்டர் எனப்படும் செயற்கை சுவாசக்கருவி மிகவும் முக்கியமான மருத்துவ உபகரணமாக செயல்பட்டு வருகிறது.
கொரானா வேகமாக பரவி வருவதால் வெண்டிலேட்டரின் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஆகையால், உலகின் பல்வேறு நாடுகள் வென்டிலேட்டர் உற்பத்தி செய்யும் நாடுகளிடமிருந்து அதை கொள்முதல் செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர்.
தென் அமெரிக்க நாடான பொலிவியாவிலும் கொரானா பரவத்தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, அந்நாட்டில் 6 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரானா தாக்குதலுக்கு அங்கு இதுவரை 250 பேர் உயிரிழந்துள்ளனர்
...
