மீன்பிடித்த 40 தமிழக மீனவர்களை சிறைபிடித்த இலங்கை படை!
மீன்பிடித்த 40 தமிழக மீனவர்களை சிறைபிடித்த இலங்கை படை!
தமிழக கடற்கரை பகுதியில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை அவ்வப்போது தாக்குதல் நடத்துவதுடன் அவர்களை சிறை பிடிப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளது.
ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வரும் இந்த பிரச்சனைக்கு இன்னும் முழுமையாக தீர்வு காணப்படவில்லை. இந்த நிலையில் மீண்டும் 40 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், தங்கச்சி மடம், பாம்பன் ஆகிய பகுதிகளில் இருந்து நேற்று காலை சுமார் 300 படகுகளில் 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். நள்ளிரவு நேரத்தில் அவர்கள் கச்சத்தீவு அருகே இலங்கை-இந்திய கடல் எல்லை பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக இலங்கை கடற்படையினர் கப்பலில் ரோந்து வந்தனர். திடீரென அவர்கள் தமிழக மீனவர்களை அங்கிருந்து விரட்டி அ...

